கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு வீதியில் ‘குமர விலாஸ்’ என்ற ஹோட்டலை நடத்தி வரும் ராஜசுந்தரம் – ஜெயந்தி தம்பதியினரிடம், ஞாயிற்றுக்கிழமை இரவு காரில் வந்த வாலிபர் ஒருவர் தோசை பார்சல் கேட்டுள்ளார். அவர்கள் பார்சல் கட்டும் பணியில் பிஸியாக இருந்தபோது, அந்த வாலிபர் திடீரென தம்பதியினரின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவியுள்ளார். பின்னர் ஜெயந்தி அணிந்திருந்த 20 கிராம் தங்கச் செயினைப் பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட தம்பதியினரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், அந்த வாலிபரை விரட்டிப் பிடிக்க முயன்றனர். அப்போது, “என்னை பிடித்தால் கத்தியால் குத்திக் கொள்வேன்” என மிரட்டிய அந்த வாலிபர், தன் கையையும் கத்தியால் அறுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிதம்பரம் காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பெரியகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பது தெரியவந்தது. மேலும், தான் வாங்கிய கார் கடனுக்கான மாதாந்திரத் தவணையைச் செலுத்தப் பணம் தேவைப்பட்டதால் இந்த செயின் பறிப்பில் ஈடுபட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லிபுலேக், லிம்பியதுரா மற்றும் காலாபானி ஆகிய எல்லைப் பகுதிகள் தொடர்பாக இந்தியா மற்றும் நேபாளம் இடையே நீண்ட காலமாகவே எல்லைப்…
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், புதிய பெருங்களத்தூர் பகுதியில் உள்ள ஒரு கட்டிட இடிப்பு தளத்திற்கு மே 28ஆம் தேதியன்று இரவு,…
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளைச் சேர்ந்த அதிமுக வர்த்தக அணி மாவட்ட இணைச் செயலாளர் 'பூக்கடை' மகேந்திரன், தொடர் தேர்தல் தோல்விகள்…
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, குடும்பப் பகை மற்றும் பழிவாங்கும் நோக்கத்தில் ஒரு வயது ஆண் குழந்தை கொடூரமான முறையில்…
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் அபார வெற்றி…
ஆளுநரின் வாகனக் கடந்து செல்லும் நிகழ்விற்காகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பிரசவ வலியால் அவதிப்பட்ட தன் கர்ப்பிணி மனைவியுடன் கணவர் ஒருவர்…