#image_title
சுந்தர் சி தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட தயாரிப்பாளர், பின்னணி பாடகர் மற்றும் நடிகராவார். பெரும்பாலும் தமிழ் சினிமாவில் பணியாற்றியிருக்கிறார். ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர் சுந்தர் சி. இவரது இயற்பெயர் விநாயகர் சுந்தர் வேல் என்பதாகும். ஆரம்பத்தில் இயக்குனர் மணிவண்ணிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து தனது சினிமா கேரியரை தொடங்கினார் சுந்தர் சி.
1995 ஆம் ஆண்டு முறைமாமன் என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் சுந்தர் சி. அதற்கு பிறகு நகைச்சுவை படங்களான உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி போன்ற திரைப்படங்களை இயக்கினார். 1997 ஆம் ஆண்டு ரஜினிகாந்தை வைத்து அருணாச்சலம் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தின் மூலம் திருப்புமுனையை பெற்றார் சுந்தர் சி. மேலும் அருணாச்சலம் திரைப்படம் மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து உன்னை கண் தேடுதே, அன்பே சிவம், வின்னர் போன்ற கமர்சியல் திரைப்படங்களை இயக்கினார் சுந்தர்சி. 2006 ஆம் ஆண்டு தலைநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக தனது பயணத்தை ஆரம்பித்தார். அதைத் தொடர்ந்து வீராப்பு, ஆயுதம் செய்வோம், ஐந்தாம் படை, குரு சிஷ்யன் போன்ற படங்களில் நடித்தார்.
2014 ஆம் ஆண்டு அரண்மனை திரைப்படத்தை இயக்கி அதில் நடித்தார் சுந்தர் சி. இந்த படம் நல்ல வரவேற்பு பெறவே தொடர்ந்து அரண்மனை 2, 3, 4 என நான்கு பாகங்களை இயக்கி இன்னும் தொடரும் என்று கூறியிருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட சுந்தர் சி வடிவேலு அவர்களை பற்றி பேசி இருக்கிறார்.
சுந்தர் சி கூறியது என்னவென்றால், வடிவேலு இயற்கையாகவே நகைச்சுவையான மனிதர். அவர் ஸ்கிரீன்ல காமெடி பண்ணும் போதே ஆடியன்ஸ் அப்படி பார்த்து சிரிப்பாங்க அது வேற விஷயம் ஏன்னா ஆடியான்ஸ்க்கு அடுத்து என்ன நடக்கும்னு தெரியாது. ஆனா நம்ம ஒரு படத்துல ஷூட்டிங் எடுக்கும்போது இதுதான் சீன் இப்படித்தான் வரப்போகுது அப்படின்னு எல்லாம் நம்ம தெரிஞ்சாலுமே ஒரு சில நேரத்துல வடிவேலு அன்என்ஸ்பெக்டடா ஒரு ஆக்ட் பண்ணி செட்டில் இருக்கிறவங்களை சிரிக்க வைத்து விடுவாரு. அப்படி ஒரு திறமை வடிவேலு கிட்ட தான் இருக்கு என்று அவரைப் பற்றி பெருமிதமாக பேசியிருக்கிறார் சுந்தர் சி.
தெற்கு டெல்லியின் ஆர்கே புரம் பகுதியில் வியாழக்கிழமை இரவு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. வேகமாக வந்த கார் ஒன்று,…
உத்தராகண்ட் மாநிலம் உத்தம் சிங் நகர் பகுதியில், கடந்த ஆகஸ்ட் 15 அன்று ஈ-ரிக்ஷா ஒன்றிற்குள் பெண் ஒருவர் ஆபத்தான…
அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மூலம் மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் பாரதிதாசன் என்ற தலித் மாணவர்,…
விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்ற பெண், அங்கு இயங்கி வரும் காகித அட்டை தயாரிக்கும் தனியார் நிறுவனம்…
கணவர் வேலை காரணமாக வெளியூர் சென்றுள்ள நிலையில், வீட்டில் தனியாக இருந்த மனைவி தனது பழைய காதலனை இரகசியமாக வீட்டிற்கு…
முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாள் அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்று திரும்பிய முதல்வர் விஜய்யின் வெளிநாட்டுப் பயணத்தை திமுக முன்னாள்…