தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO), சந்தாதாரர்களின் வசதிக்காக ‘EPFO 3.0’ என்ற புதிய திட்டத்தின் கீழ் முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, குழந்தைகளின் உயர்கல்விக்காக இனி 10 முறை வரையிலும், திருமணச் செலவுகளுக்காக 5 முறை வரையிலும் பிஎஃப் பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு மொத்தம் 3 முறை மட்டுமே எடுக்க முடிந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அவசரத் தேவைகளுக்காகக் கணக்கிலுள்ள மொத்தத் தொகையில் 75% வரை மட்டுமே எடுக்க முடியும்; மீதமுள்ள 25% தொகை எதிர்கால ஓய்வூதியத்திற்காகக் கணக்கிலேயே இருக்க வேண்டும் என விதிகள் மாற்றப்பட்டுள்ளன.
ஓய்வூதியத் தொகையைப் பெறுவதற்கான கால அளவிலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு பணியாளர் தனது ஓய்வூதியப் பணத்தை முழுமையாகப் பெற வேண்டுமானால், வேலை இழந்த பிறகு 36 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
அதேபோல், வேலையில்லாத சூழலில் மீதமுள்ள 25% பிஎஃப் தொகையைப் பெற 12 மாதங்கள் வேலையின்றி இருக்க வேண்டும் என்பது அவசியமாக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் சந்தாதாரர்களின் நீண்டகால நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஓய்வுக் காலத்தில் போதிய பணப்புழக்கம் இருப்பதை உறுதிப்படுத்தவும் கொண்டு வரப்பட்டுள்ளன.
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஆர்சிபி (RCB) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மயந்தி லாங்கரிடம் பேசுகையில், இந்திய…
இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மேற்காசியாவில் நிலவி வரும்…
குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியில் (டயரோ), பிரபல பாடகர் ஜிக்னேஷ் கவிராஜ் மீது ரசிகர்கள் கோடிக்கணக்கான…
கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத்…
பிரான்ஸின் லியோன் நகரைச் சேர்ந்த 19 வயதான கிளியோ வெர்டியர், கடந்த 2025 ஜூன் மாதம் கடும் மன உளைச்சல்…
பிரான்ஸின் சௌன்-எட்-லோயர் (Saône-et-Loire) பிராந்தியத்தில் உள்ள காடுகளில் மான்கள் சில விசித்திரமாக நடந்து கொள்வது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரு மான்…