“ப்யூஸ் போன அரசு”…. திசைதிருப்பும் வேலைகளை நிறுத்துங்க…. முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கொடுத்த ஓபன் வார்னிங்…!

Spread the love

தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டு மற்றும் மின்னழுத்தக் குறைபாடு (Voltage Problem) தொடர்பாக ஆளும் தமிழக வெற்றி கழக அரசை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார். காற்றாலை மின் உற்பத்தி சரிவடைந்ததால் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகக் காரணங்கள் கூறப்படும் நிலையில், மக்களின் அன்றாட அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத நிலையில் அரசு இயங்கி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) தளப் பதிவில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மக்கள் அறிவிக்கப்படாத மின்வெட்டினாலும், சீரற்ற மின் விநியோகத்தினாலும் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருவதைக் சுட்டிக்காட்டியுள்ளார். மின்சாரப் பற்றாக்குறையினால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வீதிக்கு வந்து போராடும் அளவிற்கு நிலைமை தீவிரமடைந்துள்ளதையும், ஊடகச் செய்திகளை மேற்கோள் காட்டி அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், மின்சாரத் துறை அமைச்சர் இந்த அவசியமான பிரச்சினையைச் சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்காமல், தேவையற்ற அவதூறுகளையும் கருத்துகளையும் பேசி திசைதிருப்ப முயல்வதாக உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார். மின்சார விநியோகம் மற்றும் ஆவின் பால் விநியோகம் போன்ற மிக முக்கியமான, அன்றாட அடிப்படைத் தேவைகளையே மக்களுக்குச் சரியாக வழங்க முடியாமல் தவெக அரசு திண்டாடி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதியாக, மக்களைப் பாதிக்கும் உண்மைப் பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திருப்பும் வேலைகளை ஆளும் தவெக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மக்களின் அவதியை உணர்ந்து, “ப்யூஸ் போன” அரசு உடனடியாக மின்வெட்டுப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து மக்கள் நலனில் முழுக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Nanthini

Recent Posts

அம்மாடியோ… விநாயகர் சதுர்த்தி கூட்டத்தில்… 15.59 மீட்டருக்கு உருவான விசித்திர உருவம்… ஷாக்கில் உறைந்த பக்தர்கள்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…

3 மணத்தியாலங்கள் ago

“6 மாதம் காத்திருந்து தூக்கிய பழி…! பெட்ரோல் போடும் போதே வாலிபரை வெட்டி சாய்த்த கும்பல்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…

3 மணத்தியாலங்கள் ago

எந்த ஆதாரமும் இல்லாம… என் பேர கெடுக்குறாங்க… திஷா சாலியன் வழக்கில்… ஆதித்ய தாக்கரே ஆவேசம்… இணையத்தில் வைரல் பதிவு…!

திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…

3 மணத்தியாலங்கள் ago

“காதலியை பார்க்க சென்று…” சடலத்தை போட்டோ எடுத்து அனுப்பிய 16 வயது சிறுமி…. வாலிபர் இறப்பில் நீடிக்கும் மர்மம்… நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… ரூமுக்குள்ள என்ன ஆச்சு?… லாட்ஜில் 23 வயது இளம்பெண் மர்ம மரணம்… கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…

4 மணத்தியாலங்கள் ago

“நானும் தப்பு பண்ணேன்… நீயும் தப்பு பண்ண…” இன்ஸ்டாகிராமில் கடைசி வீடியோ போட்டுவிட்டு தூக்கில் தொங்கிய 25 வயது பெண்… மெசேஜ் பார்த்து பதறிய தங்கை… பகீர் சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…

4 மணத்தியாலங்கள் ago