தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்சித் தேர்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், விருப்ப மனுக்கள் விநியோகத்தில் ஏற்பட்ட எதிர்பாராத பின்னடைவு அக்கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடக்க நாளில் சுமார் 10,000 மனுக்கள் பெறப்பட்டதாகவும், ஆன்லைன் வழியாக 40,000 மனுக்கள் வரை விநியோகிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், கள நிலவரப்படி 5,000-க்கும் குறைவான மனுக்களே பூர்த்தி செய்யப்பட்டு மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆர்வத்துடன் மனுக்களை வாங்கிய தொண்டர்கள், அவற்றை சமர்ப்பிப்பதில் தற்போது சுணக்கம் காட்டி வருவது தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மந்தநிலைக்குப் பின்னால் இருக்கும் முக்கியக் காரணமாக ‘கட்டண விவகாரம்’ பேசப்படுகிறது. வெறும் 100 ரூபாய்க்கு விருப்ப மனுவை வாங்கிய தொண்டர்கள், அதனைப் பூர்த்தி செய்து மீண்டும் ஒப்படைக்கும்போது சுமார் 10,000 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. சாதாரணத் தொண்டர்களுக்கு இந்தத் தொகை பெரும் சுமையாக இருப்பதால், மனுக்களை வாங்கிய பலர் அதனைத் திருப்பித் தர முன்வரவில்லை எனத் தெரிகிறது. கட்சிப் பணிகளில் காட்டிய அதே வேகத்தை நிதி வசூலிலும் எதிர்பார்த்த நிலையில், இந்தத் தொய்வு நடிகர் விஜய்யை மிகுந்த அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் குஷிபுரா பகுதியைச் சேர்ந்தவர் பாலக் (24). இவருக்கு கடந்த ஆண்டு திருமணமாகி தற்போது…
தமிழ்நாடு சட்டமன்றத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகக் கொண்டு வர வலியுறுத்தி அரசினர் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர்…
தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,118 கிராமின் தாக் சேவக் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.…
தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, தவெக அரசு…
2029 நாடாளுமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு தவெக தலைவர் விஜய் மேற்கொண்டு வரும் தேசிய அரசியல் நகர்வுகள், இந்திய அரசியலில்…
மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த தஹிபாலே குடும்பத்தில் கடந்த நான்கு தலைமுறைகளாக, அதாவது சுமார் 200 ஆண்டுகளாக ஆண்…