தமிழ்நாடு சட்டமன்றத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகக் கொண்டு வர வலியுறுத்தி அரசினர் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் கொண்டு வந்த இத்தீர்மானத்தின் மீது அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து வந்தனர். திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ரகுபதி பேசி முடித்த நிலையில், அதிமுக சார்பில் பேசுவதற்குத் தளவாய் சுந்தரத்தைச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அழைத்தார். அப்போது குறுக்கிட்ட மயிலம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சி.வி. சண்முகம், தனக்கே முதலில் பேச அனுமதி அளிக்க வேண்டும் எனக் கோரி அவையில் கடும் ஆவேசத்தை வெளிப்படுத்தினார்.
தனக்கு முன்னுரிமை அளிக்கப்படாததால் கோபமடைந்த சி.வி. சண்முகம், வெளிநடப்பு செய்யும் நோக்கில் அவையிலிருந்து வெளியேற முயன்றார். நிலைமையை உணர்ந்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், தளவாய் சுந்தரத்தைத் தொடர்ந்து அடுத்ததாகப் பேச வாய்ப்பு தருவதாக உறுதியளித்து அவரைச் சமாதானப்படுத்தினார். அதேவேளையில், அவருக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த அதிமுக எம்.எல்.ஏ கே.பி. அன்பழகனும் நேரில் சென்று பேசி, சி.வி. சண்முகத்தை மீண்டும் அவரது இருக்கையில் அமர வைத்தார். தளவாய் சுந்தரம் தனது உரையை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, சி.வி. சண்முகத்திற்குப் பேச அனுமதி வழங்கப்பட்டது.
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், சி.வி. சண்முகம் – எஸ்.பி. வேலுமணி தரப்பிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து வருகின்றன. நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சி.வி. சண்முகம் உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ-க்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததால், அவர்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமி முயன்றார். இதில் 6 உறுப்பினர்கள் தவெகவில் இணைந்த நிலையில், மற்றவர்கள் மன்னிப்புக் கடிதம் அளித்ததால் நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டது. இருப்பினும், கட்சிக்குள் இருக்கும் இந்த விரிசல் இன்னும் முழுமையாகச் சரியாகவில்லை.
கட்சிக்குள் நிலவும் இந்த உள்முரண்பாடுகள் மற்றும் உட்கட்சிப் பூசல்கள் சட்டமன்ற நடவடிக்கைகளிலும் தொடர்ந்து எதிரொலித்து வருகின்றன. யார் முதலில் பேசுவது என்பது தொடர்பாக அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே அவையிலேயே நேரடியாக ஏற்பட்ட இந்த மோதல், அக்கட்சிக்குள் நிலவும் உட்கட்சிப் பிளவை மீண்டும் ஒருமுறை வெளிப்படையாக அம்பலப்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
ஈரான் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு…
தமிழக அரச திட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசை ‘தாய் மாமன்…
தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்த்திய உரையில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கடுமையாகச் சாடியுள்ளார். முதலமைச்சரின் நேரடிக்…
தென்னிந்திய மாநிலங்களுக்கிடையே தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கடுமையான போட்டி நிலவி வரும் சூழலில், அண்டை மாநிலமான கர்நாடகா ஒரே நாளில்…
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தண்டலம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில், 19 வயது மாணவி ஒருவர் கட்டிடத்தின்…
அலங்காநல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசிய கருத்துகள், தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில் தங்களின்…