CINEMA
18 வயதில் இருந்தே.. நாங்கள் இருவரும்.. முன்னாள் காதலன் குறித்து மனம் திறந்து பேசிய த்ரிஷா..!!
தமிழ் சினிமாவில் எவர்கிரீன் நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. அவர் 40 வயதிலும் இளைஞர்களுக்கு கனவு கன்னியாக இருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் த்ரிஷா நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் த்ரிஷா ரீ-என்ட்ரி கொடுத்தார்.
இதனையடுத்து நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற 19-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. மேலும் அஜித்துடன் இணைந்து விடாமுயற்சி படத்திலும் த்ரிஷாநடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் த்ரிஷா தயாரிப்பாளர் வருண் என்பவரை காதலித்து, இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் நின்று போனது. அதன் பிறகு த்ரிஷாநடிகர் ராணாவை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த உறவும் சாதகமாக அமையவில்லை. இந்நிலையில் ராணா குறித்து பேசிய த்ரிஷா, ராணா மிகவும் நல்ல மனிதர். மிகவும் நன்றாக நடந்து கொண்டார்.
அவரிடம் பல நல்ல குணங்கள் இருக்கிறது. மக்களை மதிப்பார். அவர் ஒரு ஜென்டில்மேன். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ராணாவை எனக்கு 18 வயதில் இருந்து தெரியும். நாங்கள் நட்பாக பழகினோம். அவர் சென்னையில் வளர்ந்தவர். அவரிடம் எந்த ஈகோவும் கிடையாது. சாதாரணமாகவே நடந்து கொண்டார் என த்ரிஷா கூறியுள்ளார்.