ரயிலில் பயணம் செய்யும் போது பயணிகள் தங்களுடைய உடமைகளை கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வரும் அந்த வீடியோவில், காவலர் ஒருவர் ரயிலில் தூங்கிக் கொண்டிருக்கும் பயணியின் சட்டை பையில் இருந்து அவருக்குத் தெரியாமல் செல்போனை எடுத்து விடுகிறார். சிறிது நேரம் கழித்து அந்தப் பயணி கண் விழித்த போது தன்னுடைய போனை தேடி பதட்டம் அடைகிறார். உடனே அங்கிருந்த காவலர் அவருக்கு செல்போனை திருப்பிக் கொடுத்து, பயணத்தின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்பதை அறிவுறுத்தியுள்ளார்.
இந்த காணொளி மூலமாக ரயிலில் உறங்கும் போது செல்போன் அல்லது விலை உயர்ந்த பொருட்களை அஜாக்கிரதையாக வைப்பது திருட்டு சம்பவங்களுக்கு வழிவகுக்கும் என்பதை உணர முடிகிறது. தங்களுடைய உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் பழக்கத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை இந்த வீடியோ எடுத்துரைக்கிறது. மேலும் இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டு ரயில் பயணிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திய அந்த காவலருக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…