ரயிலில் பயணம் செய்யும் போது பயணிகள் தங்களுடைய உடமைகளை கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வரும் அந்த வீடியோவில், காவலர் ஒருவர் ரயிலில் தூங்கிக் கொண்டிருக்கும் பயணியின் சட்டை பையில் இருந்து அவருக்குத் தெரியாமல் செல்போனை எடுத்து விடுகிறார். சிறிது நேரம் கழித்து அந்தப் பயணி கண் விழித்த போது தன்னுடைய போனை தேடி பதட்டம் அடைகிறார். உடனே அங்கிருந்த காவலர் அவருக்கு செல்போனை திருப்பிக் கொடுத்து, பயணத்தின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்பதை அறிவுறுத்தியுள்ளார்.
இந்த காணொளி மூலமாக ரயிலில் உறங்கும் போது செல்போன் அல்லது விலை உயர்ந்த பொருட்களை அஜாக்கிரதையாக வைப்பது திருட்டு சம்பவங்களுக்கு வழிவகுக்கும் என்பதை உணர முடிகிறது. தங்களுடைய உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் பழக்கத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை இந்த வீடியோ எடுத்துரைக்கிறது. மேலும் இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டு ரயில் பயணிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திய அந்த காவலருக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியுள்ள தமிழக வெற்றிக் கழகம், 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் அடுத்த முதலமைச்சராகப்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் அமையப்போகும் புதிய அமைச்சரவையில் யார்…
சமூக வலைதளங்களில் புகழ்பெற வேண்டும் என்ற நோக்கில், ஓடும் ரயிலில் பயணம் செய்த சில இளைஞர்கள் ரயிலின் இருக்கை உறைகளை…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. முக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். விசிக…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூட்டணி ஆட்சி அமைக்க அழைப்பு…