மகாராஷ்டிர மாநிலம் நந்தூர்பார் மாவட்டத்தில் உள்ள தோரன்மால் மலைப் பகுதியில், ‘சீதாகாய் பாயிண்ட்’ என்ற இடத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட ஜிப்லைன் சாகச மையத்தில் சுற்றுலா பயணி ஒருவர் பயணித்துள்ளார். சுமார் 3,500 அடி ஆழமுள்ள பயங்கரமான பள்ளத்தாக்கின் மேலே அவர் சென்றுகொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக ஜிப்லைனில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு நடுவழியிலேயே வண்டி நின்றுவிட்டது. இதனால் கீழே பிரம்மாண்ட பள்ளத்திற்கு நடுவே காற்றில் தொங்கியபடி என்ன செய்வதென்று தெரியாமல் அந்தப் பயணி மிகுந்த அச்சத்தில் தவித்தார்.
இருப்பினும், அங்குப் பணியில் இருந்த ஊழியர்கள் சிறிதும் தாமதிக்காமல், தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் பாதுகாப்பு உபகரணங்களுடன் அதே ஜிப்லைன் கயிற்றைப் பயன்படுத்திச் சாதுரியமாக அவரிடம் சென்றடைந்தனர். பின்னர் அந்தப் பயணியைப் பத்திரமாக மீட்டு மலைப் பகுதிக்கு அழைத்து வந்தனர். தொழில்நுட்பக் கோளாறுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சமயோசிதமாகச் செயல்பட்டுப் பயணியின் உயிரைக் காப்பாற்றிய சாகச மைய ஊழியர்களுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சின்ன புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி முன்னாள் மாணவரான சிவபாலன் (29), தனது…
மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ்சரண் - ரீட்டா தம்பதிக்கு லவ்குஷ் நகர் அரசு சுகாதார மையத்தில்…
வங்கதேசத்தின் ரங்க்பூர் நகரில் ஓய்வுபெற்ற இந்துப் பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை…
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ரத்தினபுரத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் கவின் ஜெனில், தனது வீட்டில் தூக்கிட்டுத்…
சட்டத்தின் பார்வையில், நீண்டகாலமாகத் தொடரும் லிவ்-இன் உறவுமுறை என்பது முறைப்படியான திருமணத்திற்கு இணையானதாகவே கருதப்படுகிறது. வயது வந்த இருவர் பரஸ்பர…
உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து அரசு தொடக்கப் பள்ளிகள் U-DISE இணையதளத்தில் இன்னமும் இயங்கி வருவதாகப்…