#image_title
சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த டாப் குக் டூப் குக் என்கின்ற நிகழ்ச்சியில் இருந்து சோனியா அகர்வால் முதல் எலிமினேஷனாக வெளியேற்றப்பட்டு இருக்கின்றார். இது தொடர்பான தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு போட்டியாக தொடங்கப்பட்ட நிகழ்ச்சி தான் டாப் குக் டூப் குக். விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் குக் வித் கோமாளி. இந்த சீரியல் தற்போது ஐந்து சீசன்களாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீசனில் புதிய நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் களம் இறங்கி இருக்கின்றார்.
மேலும் புகழ், குரேஷி , youtube இர்ஃபான், திவ்யா துரைசாமி என பல பிரபலங்கள் பங்கேற்று இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி தற்போது மிகவும் போர் அடிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அதற்கு பதிலாக சன் டிவியில் போட்டியாக தொடங்கப்பட்ட டாப் குக் டூப் குக் நிகழ்ச்சி முதல் எபிசோட் முதல் பிரபலமாகி வருகின்றது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் அந்த நிகழ்ச்சியில் நடுவராக இருக்கின்றார்.
மேலும் சோனியா அகர்வால், சைத்ரா ரெட்டி, மோனிஷா, தீபா, சிங்கம் புலி, தீனா உள்ளிட்ட பல காமெடி நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் தூள் கிளப்பி வருகிறார்கள். விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை கடந்த நான்கு சீசன்களாக நடத்தி வந்த மீடியா மேசன் நிறுவனம் தான் தற்போது சன் டிவியில் டாப் குக் டூப் குக் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி ஷோவை பாக்ஸ் ஆபீஸ் தீன் நடத்தி வருகிறார்கள். இருப்பினும் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சி தான் மிகவும் பிரபலமாகி இருக்கின்றது. தற்போது ஐந்து வாரங்கள் முடிந்திருக்கும் நிலையில் முதல் எலிமினேஷன் நடைபெற்று உள்ளது. போட்டியாளர்கள் தண்ணீர் சமையல் எண்ணெயை இல்லாமல் சமைக்க வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டது.
அதில் சிறப்பாக சமைக்கவில்லை எனக் கூறி நடிகை சோனியா அகர்வால் எலிமினேட் செய்யப்பட்டார். அவர் கண்ணீருடன் அந்த செட்டில் இருந்து பிரியாவிடை கொடுத்திருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.
ஈரானின் அணுசக்தி நிலையங்களை முடக்கும் நோக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து "ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்" என்ற பெயரில்…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், ஒருதலைக் காதலால் நிகழ்ந்த கொடூரமான பழிவாங்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னைத் திருமணம் செய்து…
தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 15 ஆண்டுகள் என்பது வெறும் ஆட்சி மாற்றங்களை மட்டுமல்ல, வாக்காளர்களின் மனநிலையிலும் பெரும் முதிர்ச்சியை…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…
உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…
அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…