#image_title
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த அக்டோபர் 6ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது 70 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்பான இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சீசனில் ஒரு சில போட்டியாளர்கள் சுவாரசியமாக விளையாடி வந்தாலும் இன்னும் சிலர் எதுவும் செய்யாமல் பாதுகாப்பாக கேம் விளையாடி வருவதாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்த நிலையில் ஆர்.ஜே ஆனந்தி மற்றும் சாச்சனா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். தற்போது பிக் பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்கள் உள்ள நிலையில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது.
அதன்படி போட்டியாளர் சத்யா இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ளார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியாளராக காதல் கன்டென்ட் கொடுத்து வந்த நடிகை தர்ஷிகா வெளியேறியுள்ளார். சத்யா பெரிதாக எந்த ஒரு கண்டென்ட்டும் கொடுத்து விளையாடாத நிலையில் தர்ஷிகா காதல் என்ற பெயரில் விளையாடி வந்தது தான் மக்கள் இவரை வெளியேற்ற காரணம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த வார நாமினேஷன் தொடங்கியுள்ளது. அதில் முத்து அருணையும், ஜாக்குலின் அருணையும், சௌந்தர்யா ஜாக்குலினையும், ராயன் மஞ்சரியையும், மஞ்சரி அருணையும் நாமினேட் செய்துள்ளனர். வீட்டின் பெரும்பாலான போட்டியாளர்கள் அருணை டார்கெட் செய்து நாமினேட் செய்துள்ளார்கள்.
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…
சமூக வலைத்தளமான X தளத்தில் அலுவலகம் ஒன்றின் விசித்திரமான அறிவிப்பு ஒன்று வெளியாகி, தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. அந்த…
சீனாவின் நான்செங் நகரில் வானில் பாராகிளைடிங் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென வீசிய பலத்த காற்றினால் தனது கட்டுப்பாட்டை இழந்தார்.…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வபெருந்தகை, தனது பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து அகில இந்திய காங்கிரஸ்…
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான சேரனுக்கும் பார்த்திபனுக்கும் இடையே கடந்த 28 ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை இல்லை என்ற தகவல், சேரன்…