திருச்சூரில் 23 வயதான கர்ப்பிணி பெண் ஒருவர் தன்னுடைய கணவர் மற்றும் மாமியாரின் தொடர் துன்புறுத்தல் காரணமாக உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்களின் வரிசையில் தற்போது இந்த சோகமும் இணைந்துள்ளது. வெள்ளங்குளாரியல் வசித்து வரக்கூடிய நௌபல் என்பவருடைய மனைவி பசீலா. தன்னுடைய கணவர் வீட்டில் இவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டார். உயிரிழப்பதற்கு முன்பு தன்னுடைய தாய் மற்றும் சகோதரிக்கு whatsapp மூலமாக பல செய்திகளையும் அவர் அனுப்பியுள்ளார்.
அதில் தன்னுடைய கணவர் தன்னை பலமுறை வயிற்றில் உதைத்ததாகவும் தன்னுடைய கையை உடைத்ததாகவும் கண்ணீருடன் அவர் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய மாமியாரும் தன்னை தொடர்ந்து துன்புறுத்தியதாக அந்த பெண் கூறி உள்ளார். மேலும் அவர்கள் என்னை கொன்று விடுவார்கள் என்று தனது தாயிடம் அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணின் கணவர் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். உயிரை மாய்த்துக் கொள்ள தூண்டியதாக அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழக அரசியலில் நிலவும் கூட்டணி விவகாரங்கள் குறித்து திமுக எம்.பி. வில்சன் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதிமுக மற்றும் திமுக…
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், பொதுமக்களுக்குக் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட…
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பும் வகையில், முதலமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல்…
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் தொல். திருமாவளவன், தன்னை முதலமைச்சராக்க அதிமுக, திமுக மற்றும் கூட்டணியில் உள்ள சில…
'தமிழக வெற்றிக் கழகத்திற்கு' (தவெக) எதிராக அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி (EPS) தரப்பு களம் இறங்கியுள்ளது. சட்டப்பேரவையில் நடைபெறும் நம்பிக்கை…
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 19 வயதில் கல்லூரி மாணவியாக இருந்தபோது கிம் தனது மகன் பென்னைப் பெற்றெடுத்தார். போதிய முதிர்ச்சியின்மை காரணமாக…