#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஜோதிகா. இவர் ‘வாலி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார். இதனால் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இதைத்தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தமிழின் முன்னணி நடிகையாக குறுகிய காலத்திலேயே வளர்ந்தார்.
நடிகை ஜோதிகாவின் கேரியரில் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்திய படம் மொழி. வாய் பேச முடியாத, காது கேட்காத கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர் தனது நடிப்பில் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்தார். இதைத்தொடர்ந்து வெளியான ‘ சந்திரமுகி’ படத்திலும் அவரது நடிப்பு ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது. பின்னர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் சினிமாவுக்கு குட் பை சொல்லி விட்டு குடும்பத்தை மட்டும் கவனித்து வந்தார்.
இவர்களுக்கு தேவ் என்ற மகனும், தியா என்ற மகளும் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு சில வருடங்கள் நடிப்புக்கு ஓய்வு கொடுத்திருந்தார் ஜோதிகா. குழந்தைகள் வளர்ந்த பிறகு தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கினர் ஜோதிகா. பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார்.
2015ல் வெளியான 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். தற்பொழுது வரை பிசியாக பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படத்தில் நித்யா மேனன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வேண்டியது ஜோதிகாதான் என்று கூறப்பட்டு வந்தது. இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறிய அவர், ‘அட்லீ தன்னிடம் கதையை கூறிய போது, கதை மற்றும் தன்னுடைய கதாபாத்திரத்தில் தனக்கு ஏற்பட்ட சில கருத்து வேறுபாட்டால் தான் நடிக்கவில்லை’ என்று உண்மையை உடைத்து கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ…
https://www.youtube.com/shorts/YEe_8PPhsI8
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…