‘மெர்சல்’ படத்தில் நித்யா மேனனுக்கு பதிலாக நான் நடிக்காமல் போனதுக்கு இதுதான் காரணம்… நடிகை ஜோதிகா ‘பளீச்’ பேட்டி…

By Begam

Published on:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஜோதிகா. இவர் ‘வாலி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார். இதனால் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இதைத்தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தமிழின் முன்னணி நடிகையாக குறுகிய காலத்திலேயே வளர்ந்தார்.

   

நடிகை ஜோதிகாவின்  கேரியரில் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்திய படம் மொழி. வாய் பேச முடியாத, காது கேட்காத கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர் தனது நடிப்பில் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்தார். இதைத்தொடர்ந்து வெளியான ‘ சந்திரமுகி’ படத்திலும் அவரது நடிப்பு ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது.  பின்னர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் சினிமாவுக்கு குட் பை சொல்லி விட்டு குடும்பத்தை மட்டும் கவனித்து வந்தார்.

இவர்களுக்கு தேவ் என்ற மகனும், தியா என்ற மகளும் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு சில வருடங்கள் நடிப்புக்கு ஓய்வு கொடுத்திருந்தார் ஜோதிகா.  குழந்தைகள் வளர்ந்த பிறகு தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கினர் ஜோதிகா. பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார்.

2015ல் வெளியான 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். தற்பொழுது வரை பிசியாக பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படத்தில் நித்யா மேனன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வேண்டியது ஜோதிகாதான் என்று கூறப்பட்டு வந்தது. இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறிய அவர், ‘அட்லீ தன்னிடம் கதையை கூறிய போது, கதை மற்றும் தன்னுடைய கதாபாத்திரத்தில் தனக்கு ஏற்பட்ட சில கருத்து வேறுபாட்டால் தான் நடிக்கவில்லை’ என்று உண்மையை உடைத்து கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ…