திமுகவுடன் கூட்டணி…. “ஓபிஎஸ்-க்கு வலைவீசும் திருமா”…. எடப்பாடிக்கு விழுந்த பலத்த அடி…!

Spread the love

தமிழக அரசியலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை (OPS) திமுக கூட்டணிக்கு வருமாறு வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், ஓபிஎஸ் ஒரு சிறந்த சகிப்புத்தன்மை கொண்டவர் என்றும், சூழலுக்கு ஏற்ப வளைந்து கொடுத்துச் செல்லும் பக்குவம் கொண்டவர் என்றும் புகழ்ந்து தள்ளினார். அவர் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வந்தால் தாம் மனதார வரவேற்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தேர்தல் வாக்குறுதிகளைக் கடுமையாக விமர்சித்த திருமாவளவன், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையிலேயே அவர் பத்தாயிரம் ரூபாய் கருணைத் தொகை போன்ற அறிவிப்புகளை வெளியிடுவதாகக் கேலி செய்தார். இத்தகைய இலவச அறிவிப்புகள் தேர்தல் களத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும், மக்கள் திமுகவின் மக்கள் நலத் திட்டங்களின் பக்கமே இருப்பார்கள் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார். குறிப்பாக, கல்வி மற்றும் மருத்துவத்தைத் தவிர வேறு எதனையும் இலவசமாக வழங்கக் கூடாது என்பதே விசிகவின் நிலைப்பாடு என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்தும் தனது கருத்துக்களைப் பதிவு செய்த திருமாவளவன், விஜய் தனது உரைகளில் திமுக எதிர்ப்பை மட்டுமே பிரதானமாகக் கொண்டுள்ளதாக விமர்சித்தார். அவர் யாருக்காகக் கட்சித் தொடங்கினார், அவரது உண்மையான செயல்திட்டம் என்ன என்பது குறித்து அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கே இன்னும் புரியவில்லை என்று கூறிய அவர், விஜய் வெறும் வசனங்களை மட்டுமே பேசுவதாகவும், கள யதார்த்தம் வேறாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

கூட்டணி விவகாரங்கள் குறித்துப் பேசுகையில், திமுக தலைமையிலான கூட்டணி மிகவும் கட்டுக்கோப்பாக இருப்பதாகத் தெரிவித்தார். தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விஷயங்களில் சில விமர்சனங்கள் இருந்தாலும், கூட்டணிக்குள் எவ்வித விரிசலும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வது தங்களின் கடமை என்று கூறினார். வரும் தேர்தலில் மீண்டும் திமுக தலைமையிலான கூட்டணியே அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை திமுக அரசு உறுதி செய்துள்ளதாகவும் திருமாவளவன் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

Nanthini

Recent Posts

அச்சோ… வாழ்நாளில் முதன்முறையாகக் கடல் அலைகள்… 80 வயது தந்தைக்குச் மகன் கொடுத்த சர்ப்ரைஸ்… இணையத்தை கலக்கும் வீடியோ…!

ஒடிசா கடற்கரைக்குத் தனது 80 வயது முதிய தந்தையை முதன்முறையாக அழைத்துச் சென்ற மகனின் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் பலரது…

3 minutes ago

எல்லாம் வெறும் ஏமாற்று வேலை…! “பழைய திட்டங்களுக்கு புது ஸ்டிக்கர்…” தவெக அரசின் முதல் பட்ஜெட்டை விளாசிய எடப்பாடி பழனிசாமி…!

தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், பழைய…

32 minutes ago

“மாதம் ரூ.2,500 மற்றும் 6 இலவச சிலிண்டர் எப்போது…?” நிதியமைச்சர் மரிய வில்சன் அளித்த விளக்கம்…!!!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகளான மகளிருக்கான…

55 minutes ago

உணவு மானியத்திற்கு ரூ.14,000 கோடி ஒதுக்கீடு…! “ரேஷன் கடைகளில் இனி முழு கோதுமைக்கு குட்பை…” பட்ஜெட்டில் வெளியான பாக்கெட் கோதுமை மாவு திட்டம்…!!

தமிழகத்தில் உள்ள 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்களுக்குத் தரமான உணவுப் பொருட்களை வழங்கும் நோக்கில், பொது விநியோகத் திட்டத்தில்…

1 மணத்தியாலம் ago

கடன் ரூ.10.98 லட்சம் கோடி…! “வருவாய் துண்டு விழுந்தது எவ்வளவு…? பட்ஜெட்டில் இடம்பெற்ற பற்றாக்குறை மற்றும் செலவின பட்டியல்…!!

தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27 நிதி ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசின் வருமானம், செலவினங்கள் மற்றும் கடன்…

1 மணத்தியாலம் ago

சொன்ன வாக்குறுதிகள் எல்லாம் எங்கே….? “பட்ஜெட் பிளாஸ்ட் இல்ல, வெறும் வேஸ்ட்…” தவெக அரசை வெளுத்து வாங்கிய மு.க. ஸ்டாலின்…!!

தமிழக அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்த 2026-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை குறித்து முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது…

2 மணத்தியாலங்கள் ago