இன்ஸ்டாகிராம் காதல்… குடும்பத் தகராறு… நள்ளிரவில் காத்திருந்த அதிர்ச்சி… மண்ணெண்ணெய்யை ஊற்றியா கள்ளக்காதலன்… பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… குலை நடுங்க வைக்கும் சம்பவம்…!

Spread the love

ஈரோடு பாரதி நகரைச் சேர்ந்த வினோதினி என்ற இளம்பெண்ணுக்கும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த நவநீதிகிருஷ்ணன் என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, அது பின்னர் கள்ளக்காதலாக மாறியது. குடும்பத் தகராறு காரணமாக கணவனைப் பிரிந்து மகனுடன் தனியாக வசித்து வந்த வினோதினி, நவநீதிகிருஷ்ணனின் போக்கில் ஏற்பட்ட மாற்றத்தால் அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த நவநீதிகிருஷ்ணன், வேறு ஒருவரை அவர் காதலிப்பதாகச் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று நள்ளிரவில் ஈரோட்டிற்கு வந்த நவநீதிகிருஷ்ணன், வினோதினியின் வீட்டுக் கதவைத் தட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார். வினோதினி அவரை வீட்டை விட்டு வெளியே போகுமாறு கறாராகக் கூறியதால் கடும் கோபமடைந்த அவர், அங்கிருந்த மண்ணெண்ணெய்யை வினோதினி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். உடலில் தீ பற்றியதால் வலியால் அலறிய வினோதினி, தப்பிக்க முயன்ற நவநீதிகிருஷ்ணனை இறுகப் பிடித்துக் கொண்டதில் அவருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோரும் அக்கம்பக்கத்தினரும், படுகாயமடைந்த வினோதினியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி வினோதினி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நவநீதிகிருஷ்ணனைத் தீவிரமாக கண்காணித்து வருவதுடன், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் அவரை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Visaka

Recent Posts

ஐயோ பாவம்… சுரங்கப்பாதையில் நொறுங்கிய SUV கார்… கதறித் துடித்த பயணிகள்… காங்கிரஸ் முக்கிய புள்ளி பரிதாப பலி… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!

வெள்ளிக்கிழமை அதிகாலை புனே-மும்பை விரைவுச்சாலையின் 'மிஸ்ஸிங் லிங்க்' சுரங்கப்பாதைக்குள் நடந்த கொடூரமான சாலை விபத்தில், பிம்ப்ரி சின்ச்வாட் வாக்காட் பகுதியைச்…

21 minutes ago

அட கொடுமையே… வாடிக்கையாளர் போல வந்து துப்பாக்கிச் சூடு… நகைக் கடையில் நடந்த பகீர் சம்பவம்… பதறவைக்கும் வீடியோ…!

பெங்களூரு அருகே தாபஸ்பேட்டையில் உள்ள 'பிரேம் சிவா ஜுவல்லரி' நகைக் கடைக்குள் புகுந்த 5 முதல் 6 பேர் கொண்ட…

29 minutes ago

ஐயோ… என் 300 ரூபாய் போச்சு… தம்பிக்குத் துணி எடுக்க முடியாதே?… கதறி அழுத பாட்டி… பேருந்துக்குள் நடந்த அந்த சம்பவம்… நெட்டிசென்களை கலங்க வைக்கும் வைரல் வீடியோ…!

ஒரு பாசமுள்ள சகோதரியின் அழுகை அங்கிருந்த மனிதர்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பியது. சகோதரனின் முகத்தைக் கடைசியாகப் பார்த்து, அவனுக்கு ஒரு…

38 minutes ago

காதலனா? கணவனா? துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் பார்சல்… சினிமாவை மிஞ்சும் கொடூரம்… காட்டிக்கொடுத்த சென்ட்ரல் சிசிடிவி… போலீஸ் வலைவீச்சு…!!

சென்னையிலிருந்து டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் ஆக்ரா கண்டோன்மெண்ட் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது, பொதுப்பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த சிவப்பு நிற…

46 minutes ago