ஈரோடு பாரதி நகரைச் சேர்ந்த வினோதினி என்ற இளம்பெண்ணுக்கும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த நவநீதிகிருஷ்ணன் என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, அது பின்னர் கள்ளக்காதலாக மாறியது. குடும்பத் தகராறு காரணமாக கணவனைப் பிரிந்து மகனுடன் தனியாக வசித்து வந்த வினோதினி, நவநீதிகிருஷ்ணனின் போக்கில் ஏற்பட்ட மாற்றத்தால் அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த நவநீதிகிருஷ்ணன், வேறு ஒருவரை அவர் காதலிப்பதாகச் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று நள்ளிரவில் ஈரோட்டிற்கு வந்த நவநீதிகிருஷ்ணன், வினோதினியின் வீட்டுக் கதவைத் தட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார். வினோதினி அவரை வீட்டை விட்டு வெளியே போகுமாறு கறாராகக் கூறியதால் கடும் கோபமடைந்த அவர், அங்கிருந்த மண்ணெண்ணெய்யை வினோதினி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். உடலில் தீ பற்றியதால் வலியால் அலறிய வினோதினி, தப்பிக்க முயன்ற நவநீதிகிருஷ்ணனை இறுகப் பிடித்துக் கொண்டதில் அவருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டன.
இதையடுத்து அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோரும் அக்கம்பக்கத்தினரும், படுகாயமடைந்த வினோதினியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி வினோதினி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நவநீதிகிருஷ்ணனைத் தீவிரமாக கண்காணித்து வருவதுடன், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் அவரை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஒடிசா மாநிலத்தில் மருத்துவச் சிகிச்சைக்குப் பணம் இல்லாததால், 73 வயது முதியவர் ஒருவர் உடைந்த காலோடு 150 கிலோமீட்டர் தூரம்…
தெலங்கானா மாநிலம் ஜகித்யாலில் உள்ள காண்ட்லபல்லி மாதிரி அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவி…
வெள்ளிக்கிழமை அதிகாலை புனே-மும்பை விரைவுச்சாலையின் 'மிஸ்ஸிங் லிங்க்' சுரங்கப்பாதைக்குள் நடந்த கொடூரமான சாலை விபத்தில், பிம்ப்ரி சின்ச்வாட் வாக்காட் பகுதியைச்…
பெங்களூரு அருகே தாபஸ்பேட்டையில் உள்ள 'பிரேம் சிவா ஜுவல்லரி' நகைக் கடைக்குள் புகுந்த 5 முதல் 6 பேர் கொண்ட…
ஒரு பாசமுள்ள சகோதரியின் அழுகை அங்கிருந்த மனிதர்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பியது. சகோதரனின் முகத்தைக் கடைசியாகப் பார்த்து, அவனுக்கு ஒரு…
சென்னையிலிருந்து டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் ஆக்ரா கண்டோன்மெண்ட் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது, பொதுப்பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த சிவப்பு நிற…