கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஹெப்பகோடியில் கழுத்தை அறுபட்ட நிலையில் ஒரு பெண்ணும், அப்பெண்ணின் கணவருடைய நண்பரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் பிஜோன் மண்டல். இவரது மனைவி மந்திர் மண்டல் (27). இருவருக்கும் கடந்த 8 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது . இந்த தம்பதிக்கு ஆறு வயதில் மகன் உள்ளான் பிஜோன் மண்டல் தனது மனைவி மற்றும் மகனுடன் பெங்களூரு புறநகர் ஹெப்பகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட திருபாளையாவில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார்.
சுமன் மண்டல் [28] என்பவரும் பெங்களூரில் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில் பிஜோனும் மனைவியும் கருத்து வேறுபாட்டால் 2 வருடமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையே ஒரு ஆண்டுக்கு முன்பு பிஜோனும் அவன் நண்பன் சுமனும் அந்தமானுக்கு வேலைக்காக சென்றுள்ளனர். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சுமன் பெங்களூருக்கு வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மந்திரின் வீட்டிற்குச் சென்றுள்ளான். அங்கு இருவருக்கும் ஏதோ ஒரு தகராறு ஏற்பட்டுள்ளது, வாக்குவாதத்தில் சுமன் மந்திரின் கழுத்தில் கத்தியால் அறுத்ததில் சம்பவ இடத்திலே மந்திர் உயிர் பறிபோனது. பின்பு சுமன் அருகில் இருந்த அறைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொளத்தூர் தொகுதி பாபுவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தனியார் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், அவரது ஆரோக்கியம் குறித்து அமைச்சர்…
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில், பெண் ஒருவர் தனது மாமியார் மற்றும் நாத்தனாரால் கொடூரமாகத் தாக்கப்படும் அதிர்ச்சி வீடியோ…
தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று…
பெங்களூரு யலஹங்காவில் 13 வயது சிறுவன் கடத்திப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாஸ்கர் ரெட்டி…
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதான கட்டுமான மேற்பார்வையாளர் கிஷோர் தனாக், தனது 5 வயது மகளைக்…
ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், தர்மவரத்தின் சிவ்நகரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. ஊர்வலத்தின்…