கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஹெப்பகோடியில் கழுத்தை அறுபட்ட நிலையில் ஒரு பெண்ணும், அப்பெண்ணின் கணவருடைய நண்பரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் பிஜோன் மண்டல். இவரது மனைவி மந்திர் மண்டல் (27). இருவருக்கும் கடந்த 8 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது . இந்த தம்பதிக்கு ஆறு வயதில் மகன் உள்ளான் பிஜோன் மண்டல் தனது மனைவி மற்றும் மகனுடன் பெங்களூரு புறநகர் ஹெப்பகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட திருபாளையாவில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார்.
சுமன் மண்டல் [28] என்பவரும் பெங்களூரில் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில் பிஜோனும் மனைவியும் கருத்து வேறுபாட்டால் 2 வருடமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையே ஒரு ஆண்டுக்கு முன்பு பிஜோனும் அவன் நண்பன் சுமனும் அந்தமானுக்கு வேலைக்காக சென்றுள்ளனர். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சுமன் பெங்களூருக்கு வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மந்திரின் வீட்டிற்குச் சென்றுள்ளான். அங்கு இருவருக்கும் ஏதோ ஒரு தகராறு ஏற்பட்டுள்ளது, வாக்குவாதத்தில் சுமன் மந்திரின் கழுத்தில் கத்தியால் அறுத்ததில் சம்பவ இடத்திலே மந்திர் உயிர் பறிபோனது. பின்பு சுமன் அருகில் இருந்த அறைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…