மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக விசாரணை நடத்தச் சென்ற மூன்று பெண் நீதிபதிகள் உள்ளிட்ட ஏழு நீதித்துறை அதிகாரிகளைப் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் (BDO) வைத்து பல மணிநேரம் சிறைபிடிக்கப்பட்ட நீதித்துறை அதிகாரிகளின் வாகனங்கள் மீது நள்ளிரவில் கற்கள் வீசப்பட்டதைக் கடுமையாகக் கண்டித்துள்ள உச்ச நீதிமன்றம், அவர்களைப் பாதுகாக்க மத்திய ஆயுதப் படைகளை அனுப்ப அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, இந்தச் சம்பவத்தை நீதித்துறை அதிகாரிகளை மிரட்டுவதற்கான அப்பட்டமான முயற்சி என்றும், நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு விடப்பட்ட சவால் என்றும் வர்ணித்தது. மாநில அரசு மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டும், நள்ளிரவு வரை அவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். “இது ஒரு பிளவுபட்ட மாநிலம்” என்று குறிப்பிட்ட நீதிபதிகள், அரசாங்கம் தனது கடமையைச் செய்யத் தவறிவிட்டதாகச் சாடினர்.
நீதித்துறை அதிகாரிகளின் மன உறுதியைக் குலைக்கவும், சட்டபூர்வமான தீர்ப்பு வழங்கும் நடைமுறையைத் தடுக்கவும் திட்டமிட்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக நீதிமன்றம் கருதுகிறது. இத்தகைய உளவியல் ரீதியான தாக்குதல்களை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த முற்றுகை மற்றும் வன்முறை குறித்த விசாரணையை சிபிஐ (CBI) அல்லது என்ஐஏ (NIA) வசம் ஒப்படைக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.
நீதிமன்ற வளாகத்திற்குள் தேவையற்ற கூட்டங்கள் கூடுவதைக் தவிர்க்கவும், பாதுகாப்பு நெறிமுறைகளை வலுப்படுத்தவும் உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. நீதித்துறை அதிகாரிகளின் இல்லங்களுக்கும் தேவைப்பட்டால் மத்தியப் படைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மாநில அதிகாரிகள் விரிவான இணக்க அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டுள்ளது.
இந்தோனேசியாவைச் சேர்ந்த 24 வயதான ரெனெடா ஃபதியா (Reneta Fadhia), 62 வயதான ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில்,…
தமிழ்நாடு வருவாய்த்துறை பட்டா மாறுதல் நடைமுறையில் மிக முக்கியமான அதிரடி மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி, நில உட்பிரிவு (Sub-division) தேவைப்படும்…
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வுடன் கூடிய ஓய்வூதியத் தொகை அவர்களின்…
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண், செய்தியாளர்களிடம்…
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரம் தற்போது கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையால் தவித்து வரும் நிலையில், ஒட்டுமொத்தப் பொதுமக்களும் தண்ணீருக்காகத்…
திமுக ஐடி விங் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் முதலமைச்சரைக் கடுமையாக விமரிசித்துள்ளது.…