திமுக கூட்டணியில் இடமில்லை என்பது உறுதியானதைத் தொடர்ந்து, பாமக வட மாவட்டங்களில் தனித்துப் போட்டியிடப் போவதாகப் பரவலான பேச்சுகள் எழுந்தன. இந்நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் மூன்றாம் நாளாக நடைபெற்ற வேட்பாளர் நேர்காணலில் பேசிய மருத்துவர் ராமதாஸ், “நாம் அமைக்கும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும்” என்று அதிரடியாக அறிவித்துள்ளார். இதன் மூலம், தனித்துப் போட்டி என்ற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு, பாமக ஒரு பலமான கூட்டணியை எதிர்நோக்கி காத்திருப்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போதுள்ள அரசியல் சூழலில், அதிமுக அல்லது பாஜக ஆகிய கட்சிகளில் ஏதேனும் ஒன்றுடன் பாமக கைகோர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விருப்ப மனு அளித்தவர்களிடம் நடத்தப்பட்ட இந்த நேர்காணல், தொண்டர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாமகவின் இந்த வியூகம் வரும் தேர்தலில் வட மாவட்டங்களில் எந்த மாதிரியான அரசியல் மாற்றங்களை நிகழ்த்தப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், இன்னும் நான்கு நாட்களே மீதமிருப்பதால் அரசியல் கட்சிகள் அனல்…
பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு…
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…
சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…
அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…
யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…