எங்க கருப்பன் கிட்டயே கைவரிசையை காட்டுறீயா..? கருப்பசாமி கோவிலுக்கு திருட சென்ற திருடன்… பொதுமக்கள் கொடுத்த அதிர்ச்சி..!!

Spread the love

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள முன்னூரான் காடுவெட்டி கிராமத்தில் புகழ்பெற்ற கருப்புசாமி கோவில் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இக்கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த உண்டியல் மற்றும் பீரோவை உடைத்து காணிக்கைப் பணம் மற்றும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய அரிவாள்களைக் கொள்ளையடித்துச் சென்றார். இச்சம்பவம் குறித்து ஆண்டிமடம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அதேவேளையில், கோவிலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு கிராம மக்களும் கொள்ளையனைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மீண்டும் அப்பகுதியில் நடமாடியதை அறிந்த கிராம மக்கள், அவரை மடக்கிப் பிடித்து கோவில் அறைக்குள்ளேயே வைத்து பூட்டினர். இதுகுறித்து ஆண்டிமடம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, விரைந்து வந்த போலீசார் அந்த நபரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிடிபட்ட நபர் வடவீக்கம் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், அவர்தான் கருப்புசாமி கோவிலில் உண்டியல் மற்றும் பீரோவை உடைத்து, அவ்வப்போது பணம் மற்றும் அரிவாள்களைத் திருடிச் சென்றதை ஒப்புக்கொண்டார். மேலும், அப்பகுதியில் நடந்த மின்மோட்டார் காப்பர் வயர் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களிலும் இவருக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Swetha

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

1 மணத்தியாலம் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

1 மணத்தியாலம் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

2 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

2 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

2 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

2 மணத்தியாலங்கள் ago