உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள கோசி கலான் பகுதியில் இயங்கி வரும் பிரபல நகைக்கடை ஒன்றில், சினிமா படங்களை மிஞ்சும் வகையில் பிரம்மாண்டக் கொள்ளை சம்பவம் ஒன்று அரங்கேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவன், நள்ளிரவில் நகைக்கடையின் கூரையை சாமர்த்தியமாக உடைத்து உள்ளே புகுந்துள்ளான். யாருக்கும் எந்தச் சந்தேகமும் வராத வகையில், சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாகக் கடைக்குள்ளேயே தங்கி இருந்து, அங்கிருந்த ரூ.14 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரூ.14 லட்சம் ரொக்கப் பணத்தைச் சுருட்டிக்கொண்டு கூரை வழியேய தப்பியோடியுள்ளான்.
காலை கடை உரிமையாளர்கள் வந்து பார்த்தபோது கடை கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு உறைந்துபோயினர். போலிஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கடையின் ரகசியங்கள் அனைத்தும் தெரிந்த முன்னாள் ஊழியர் ஒருவரே இதற்குப் பின்னணியில் உளவு பார்த்திருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலிஸார், தப்பியோடிய முகமூடிக் கொள்ளையனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சொத்துத் தகராறிலும் வாடகை பணப் பிரச்சினையிலும் ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் சொந்தக் குடும்பத்தாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம்…
சமீபத்திய அரசியல் நகர்வுகளின் பின்னணியில், தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் விமர்சனங்களுக்குப் பதில் அளிக்காமல் எ.வ.வேலு விலகி நிற்பது…
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளித்தல், புதுப்பித்தல் மற்றும் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான விவகாரங்களில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக…
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 17 வயதே ஆன மைனர் சிறுவன் ஒருவன் காரை அதிவேகமாகவும் அலட்சியமாகவும் ஓட்டி வந்து, சாலையில்…
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சேதுராஜ் - லலிதா தம்பதியரின் 28…
சென்னை ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணியாற்றி வரும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் ஒருவர், சென்னை…