தமிழ்நாடு முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது மத்திய குற்றப்பிரிவு (CCB) காவல்துறையினர் ஊழல் வழக்கு பதிவு செய்துள்ள செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தைப் புதுப்பிக்கவும், நகர் ஊரமைப்புத் துறை (DTCP) அனுமதி பெறவும் சுமார் ₹100 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட அரசகுமார் என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களிலும் அமைச்சருக்குத் தொடர்பிருப்பதை உறுதி செய்யும் வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த ஆதாரங்களின் அடிப்படையில் அன்பில் மகேஸ் எந்த நேரத்திலும் கைது செய்யப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மாநில அரசியலில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
சொத்துத் தகராறிலும் வாடகை பணப் பிரச்சினையிலும் ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் சொந்தக் குடும்பத்தாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம்…
சமீபத்திய அரசியல் நகர்வுகளின் பின்னணியில், தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் விமர்சனங்களுக்குப் பதில் அளிக்காமல் எ.வ.வேலு விலகி நிற்பது…
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளித்தல், புதுப்பித்தல் மற்றும் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான விவகாரங்களில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக…
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 17 வயதே ஆன மைனர் சிறுவன் ஒருவன் காரை அதிவேகமாகவும் அலட்சியமாகவும் ஓட்டி வந்து, சாலையில்…
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சேதுராஜ் - லலிதா தம்பதியரின் 28…
சென்னை ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணியாற்றி வரும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் ஒருவர், சென்னை…