Categories: அரசியல்

“என் கோட்டைக்குள் வரக்கூடாது…” கோவை விவகாரத்தில் பாஜகவுக்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி… அதிரும் அரசியல் களம்…!!

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், அதிமுக மற்றும் பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு பெரும் இழுபறியாக மாறியுள்ளது. ஆரம்பத்தில் 50 இடங்களைக் கோரிய பாஜக, தற்போது 41 தொகுதிகள் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறது. ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 25 இடங்களுக்கு மேல் வழங்க முடியாது என்று கறாராகத் தெரிவித்துவிட்டார். குறிப்பாகக் கோவை போன்ற அதிமுகவின் கோட்டை மற்றும் தென் மாவட்டத் தொகுதிகளை பாஜக குறிவைப்பது அவருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மோதல் காரணமாகப் பிரதமர் மோடியை வரவேற்க எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை என்று கூறப்படுகிறது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நடத்திய பலகட்டப் பேச்சுவார்த்தைகளிலும் எந்த முடிவும் எட்டப்படாததால், இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் அதிகரித்துள்ளது. இந்தச் சிக்கலால் பாமக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் தங்கள் முடிவை அறிவிக்க முடியாமல் தவிக்கின்றன. இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைக்காக எடப்பாடி பழனிசாமி மீண்டும் டெல்லி செல்ல வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

Devi Ramu

Recent Posts

ஐயோ… கூரையையே தூக்குறானுங்க சார்… எஸ்டேட்டில் பகல் நேரத் துணிச்சல்… ஜெரார்ட் தகடுகளைக் கழற்றிய திருடன்… சிக்கியது எப்படி?… இணையத்தில் வைரல்…!

இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…

55 minutes ago

“பரிகார அறையில் பள்ளி சீருடைகள்…” சிறுமிகளிடம் அத்துமீறிய போலி சாமியார்… லேப்டாப்பில் சிக்கிய ஆபாச வீடியோக்கள்…. அதிர்ச்சி பின்னணி…!!

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…

1 மணத்தியாலம் ago

“வீட்டின் கதவில் ஏறிய கொடிய கட்டுவிரியன் பாம்பு…” நொடியில் பாய்ந்து எஜமானரின் குடும்பத்தை காப்பாற்றிய வளர்ப்பு பூனை…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…

1 மணத்தியாலம் ago

அடியே… எல்லாத்தையும் உன் புருஷனுக்கு அனுப்பிட்டேன் பாரு… காதலன் செய்த கொடூரம்… மன உளைச்சலால் பெண் எடுத்த விபரீத முடிவு… உ . பி – யில் பதறவைக்கும் சம்பவம்…!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…

1 மணத்தியாலம் ago

அட கொடுமையே… கடன் சுமையால் பெற்ற பிள்ளைகளுக்கு… விஷம் கொடுத்து தந்தை தற்கொலை… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…

1 மணத்தியாலம் ago