செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்…. கோர்ட்டில் பல்டி அடித்த அரசுத் தரப்பு – திமுக பரபரப்பு விளக்கம்….!

Spread the love

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (ஜூலை 08) நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கியுள்ளது. இது தொடர்பாக திமுகவின் கழக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், அரசியல் பழிவாங்கும் நோக்கில் ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கில் இருந்து செந்தில் பாலாஜிக்கு எவ்வாறு முன்ஜாமீன் கிடைத்தது என்பது குறித்த அதிரடியான விளக்கங்களை முன்வைத்துள்ளார்.

இந்த வழக்கின் பின்னணி குறித்து என்.ஆர்.இளங்கோ விளக்குகையில், “ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் மர்ம நபர் ஒருவர் பேசி, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும்போது அதற்கு எதிராக வாக்களித்தால் 35 கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசியதாகப் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், ஜூன் 26 அன்று இரவு 10 மணிக்கு அந்தத் தொலைபேசி அழைப்பு வந்ததாகக் கூறப்பட்ட நிலையிலும், ஜூன் 29 ஆம் தேதி வரை அந்த சட்டமன்ற உறுப்பினர் இதுகுறித்து எந்தப் புகாரும் அளிக்கவில்லை. இரண்டு நாட்களாக திட்டமிட்டு, என்னென்ன வார்த்தைகளைப் பயன்படுத்தலாம் என்று யோசித்து, ஜோடிக்கப்பட்ட ஒரு புகாரே இது” என்று அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், இந்த வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்கு நேரடியாகத் தொடர்பு இருப்பதற்கான எந்தவொரு நேரடி சாட்சியங்களும் அரசுத் தரப்பிடம் இல்லை என்பதை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியதாக அவர் தெரிவித்தார். காவல் துறையினரிடம் அளிக்கப்பட்ட, நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இவர்களது பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அரசுத் தரப்பு முன்வைத்த ஒரே வாதம், குற்றம் சாட்டப்பட்ட திருநாவுக்கரசும், செந்தில் பாலாஜியும் ஒரே நாளில் ஈரோட்டில் இருந்தனர் என்பது மட்டுமே தவிர, அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்ததற்கோ அல்லது சதித் திட்டம் தீட்டியதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்று திமுக தரப்பு வாதாடியுள்ளது.

முக்கியமாக, இந்த வழக்கு முழுக்க முழுக்க திமுகவின் மீது களங்கம் விளைவிப்பதற்காகவும், அரசை கவிழ்க்கும் சதி என்றும் திட்டமிட்டு சித்தரிக்கப்பட்டது என்று என்.ஆர்.இளங்கோ கூறினார். சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் என்பது அரசை கவிழ்ப்பதாக ஆகாது என்பதை நீதிமன்றத்தில் வாதிட்ட பிறகு, அரசுத் தரப்பு தாக்கல் செய்த பதில் மனுவில் ‘அரசை கவிழ்க்க வேண்டும்’ என்ற வார்த்தையையே நீக்கிவிட்டனர். இதன் மூலம் முதல் தகவல் அறிக்கையின் (FIR) நம்பகத்தன்மை முழுமையாக நீர்த்துப்போனதாலும், சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எந்தவொரு முகாந்திரமும் ஆதாரமும் இல்லாததாலுமே நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளது என்று திமுக தரப்பு தெளிவுபடுத்தியுள்ளது.

SATHISH R

Recent Posts

“யார்கிட்டயும் சொல்லக்கூடாது பாப்பா…” 20 ரூபாய் கொடுத்து மாணவியை மிரட்டிய நடத்துனர்…. தாயிடம் சொல்லி அழுத மகள்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி, தினமும் அரசு பேருந்தில் பள்ளிக்குச் சென்று வந்துள்ளார்.…

3 minutes ago

“ஏமாத்துரத்துக்கும் ஒரு அளவு வேண்டாமா?…” 2 கிலோ தங்கம்… 10 அடுக்குமாடி குடியிருப்பு… சந்தை மதிப்பு ரூ.150 கோடியா?… ஆனா சாதாரண எஞ்சினியர்… லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி வேட்டை…!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக் கழகத்தில் பணியாற்றி வரும் எஞ்சினியர் முத்யம் வெங்கட ரமணா, வருமானத்திற்கு…

4 minutes ago

இது என்னடா புதுசா இருக்கு… “180% அதிக மழை…” இமயமலையைக் தாண்டி… 10,000 கி.மீ மேகப்படை… ஆசிய கண்டத்தையே சூழும் பேராபத்து?… மிரள வைக்கும் சாட்டிலைட் போட்டோ…!

நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை தாமதமாகத் தொடங்கி, சில வாரங்களிலேயே மந்தமடைந்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் கவலையடைந்திருந்தனர். இருப்பினும்,…

15 minutes ago

ரயில்வே எக்ஸாம்க்கு படிக்கிறீங்களா…? 1.61 லட்சம் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்… மத்திய அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!

ரயில்வே தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் எந்தவித வினாத்தாள் கசிவோ அல்லது முறைகேடுகளோ நிகழவில்லை என்றும், சுமார் 1.61…

16 minutes ago

உயிர்காக்கும் மருந்தா? இல்ல விஷமா?… “C.B.I வலையில் சிக்கிய ‘மதுரை’ ராஜா… புதுச்சேரியை உலுக்கிய போலி மருந்து மாஃபியா… ரூ.2 கோடி லஞ்சம்… பதறும் உயரதிகாரிகள்…!

புதுச்சேரியில் அடுத்தடுத்து வெளிச்சத்திற்கு வரும் போலி மருந்து தயாரிப்பு கும்பல்களின் அத்துமீறல்கள், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளன.…

23 minutes ago

செக் மோசடி வழக்கு….! நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்த நீதிபதி…. அதிர்ச்சியில் திரையுலகம்…!!

'மன்னர் வகையறா' திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக ஃபைனான்சியர் கோபி என்பவரிடம் நடிகர் விமல் ரூ.4.5 கோடி கடன் வாங்கியிருந்தார். கடனைத் திருப்பிச்…

25 minutes ago