இலவச சிகிச்சை இனி இல்லை…. அரசு ஊழியர்களின் மருத்துவக் காப்பீட்டில் இவ்வளவு குளறுபடியா…. வேல்முருகன் உடைத்த அதிரடி உண்மை….!

Spread the love

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில், ‘புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்-2026’ கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் பொதுச் சிகிச்சைகளுக்கு ரூ.7.50 லட்சம் வரையும், 46 வகையான தீவிர நோய்களுக்கு ரூ.12 லட்சம் வரையும் பணமில்லா காப்பீட்டு சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இத்திட்டத்தின் பேக்கேஜ் முறைகளில் பல்வேறு குறைபாடுகளும் முறைகேடுகளும் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாகத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், ஓய்வூதியர்களின் நலனைக் காக்க அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்று மிக முக்கியமான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இப்புதிய திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சைக்குப் பதிலாக ‘பேக்கேஜ்’ அடிப்படையில் சிகிச்சை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர, அந்தப் பேக்கேஜ் தொகை எவ்வளவு என்பது அரசாணையில் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை என்று வேல்முருகன் சுட்டிக்காட்டியுள்ளார். முந்தைய காப்பீட்டுத் திட்டங்களில் ஒட்டுமொத்த சிகிச்சைச் செலவில் 30 முதல் 40 சதவீதம் வரை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கி வந்த நிலையில், தற்போதைய புதிய பேக்கேஜ் முறையில் அது வெறும் 15 முதல் 25 சதவீதமாகக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் இனி ‘இலவச சிகிச்சை’ என்பது பெயரளவில் மட்டுமே இருக்குமோ என்றும், மீதித் தொகையைத் தங்களின் சொந்தப் பணத்தில் இருந்து செலுத்த வேண்டிய நிலை ஏற்படுமோ என்றும் அச்சம் எழுந்துள்ளது.

சிகிச்சைகளுக்கான நிதி வரம்புகள் மிகக் குறைவாகக் குறைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சில முக்கிய உதாரணங்களையும் முன்வைத்துள்ளார். இதய அடைப்பு, டெங்கு போன்ற தீவிரப் பிரச்சினைகளுக்கான மெடிக்கல் மேனேஜ்மென்ட்’ சிகிச்சைக்கு வெறும் ரூ.10,000 மட்டுமே வழங்கப்படும் என்றும், நோயாளி பொது வார்டில் தங்க வைக்கப்பட்டு 3 நாட்களுக்குள் டிஸ்சார்ஜ் செய்யப்பட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கண்புரை அறுவை சிகிச்சைக்கான உச்ச வரம்பு ரூ.30 ஆயிரத்திலிருந்து ரூ.13 ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு ஸ்டெண்டுகளுடன் கூடிய ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைக்கு வெறும் ரூ.85 ஆயிரம் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது ஓய்வூதியதாரர்களைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தக் குறைபாடுகள் அனைத்தும் காப்பீட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கேற்பவே வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினரும் குற்றம் சாட்டுகின்றனர். அடுத்த 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கப் போகும் இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் எழுந்துள்ள குளறுபடிகளைத் தமிழக அரசு உடனடியாகக் களைய வேண்டும் என்று வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். முதியவர்கள் மற்றும் எளிய அடித்தட்டு பணியாளர்களின் மருத்துவ நலனைப் பாதுகாக்கும் வகையில், இத்திட்டத்தின் குறைகளை நீக்கி, திருத்தப்பட்ட புதிய அரசாணையை அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த அரசு ஊழியர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

SATHISH R

Recent Posts

“போலீஸ் அடித்துதான் என் மகன் இறந்தான்”… பெற்றோர் கதறல்… தூத்துக்குடி சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி…. டிஎஸ்பி சுனில் கொடுத்த பரபரப்பு விளக்கம்…!

தூத்துக்குடியில் கைதாகி மரணமடைந்த அருணாச்சலம் என்ற கைதியின் உயிரிழப்பு குறித்து, காவல்துறையினரால் தாக்கப்பட்டதாலேயே அவர் உயிரிழந்ததாக அவரது பெற்றோர் மற்றும்…

8 minutes ago

“புடவை வாங்கித் தரலையா?”….குக்கர் மூடியை கையில் எடுத்த மனைவி… மாடியில் கதறி அழுத 7 வயது சிறுவன்… அடுத்து நடந்த அதிர வைக்கும் சம்பவம்…!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம், பத்லாபூர் சிர்காவ் பகுதியில் வசித்து வந்தவர் ஹரி ராம் சிங் (35). இவரது மனைவி…

18 minutes ago

BREAKING: நீட் தேர்வில் மிகப்பெரிய மாற்றம்?…. சற்றுமுன் பிரதமர் மோடி வெளியிட்ட அந்த ஒரு முக்கிய அறிவிப்பு….!

நீட் மற்றும் பிற தகுதித்தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய போராட்டம், நாடு முழுவதும் பரவி பெரும்…

27 minutes ago

BREAKING: “நான் பதவி விலகுகிறேன்”…. பரவும் கடிதமும்.. டெல்லியில் சூடுபிடிக்கும் போராட்டமும்…. சற்றுமுன் பரபரப்பு….!

மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று, கடந்த 21-ஆம் தேதியே தனது பதவியை…

36 minutes ago

மரணத்தின் விளிம்பில் போராட்டம்…! 500 அடி பள்ளத்தில் விழுந்த சென்னை சுற்றுலாப் பயணி… கொழுக்குமலை டிரெக்கிங்கில் கொடூர விபத்து…!!

கொழுக்குமலைப் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த சென்னையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி கார்த்திக்(31) என்பவர், எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்து சுமார் 500…

38 minutes ago

திடீரென முடக்கப்பட்ட மெரினா…. அலர்ட்டான போலீஸ்…. பொதுமக்கள் உள்ளே செல்லத் தடை… சென்னையில் உச்சகட்ட பரபரப்பு….!

சென்னை மெரினா கடற்கரையில் நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள் திரளக் கூடும் என்ற ரகசியத் தகவலின் அடிப்படையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப்…

41 minutes ago