“இனிமே என் பொண்டாட்டிக்கு போன் பண்ணாத!”… எச்சரித்தும் கேட்காத கள்ளக்காதலன்.. நள்ளிரவில் கணவன் போட்ட ஸ்கெட்ச்… பல்லடத்தை உலுக்கிய சம்பவம்…!!!

Spread the love

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் அருள்புரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் தர்மா என்பவரது மனைவி ராஜேஸ்வரிக்கும், கோபிநாத் என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. சமீபத்தில் தனது மனைவியின் செல்போனைப் பயன்படுத்திய விக்னேஷ், அதில் கோபிநாத்திடமிருந்து வந்த தொடர் அழைப்புகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கோபிநாத்தை எச்சரித்த போதிலும், அவர் அதனைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் தர்மா, கடந்த 6-ம் தேதி அதிகாலை 3 மணியளவில் கோபிநாத்தை மாதப்பூர் கிருஷ்ணாபுரம் பகுதிக்குத் தனியாக வருமாறு அழைத்துள்ளார். அங்கு வந்த கோபிநாத்திடம், தனது மனைவியுடன் இருக்கும் தொடர்பைத் துண்டித்துக் கொள்ளுமாறு விக்னேஷ் எச்சரித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைக்கலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரம் தாங்காத விக்னேஷ், அருகில் கிடந்த கயிற்றை எடுத்து கோபிநாத்தின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

இதற்கிடையில், காணாமல் போன தனது கணவரைக் கண்டுபிடித்துத் தருமாறு கோபிநாத்தின் மனைவி சத்யபாமா திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கோபிநாத்தைத் தேடி வந்த நிலையில், கொலையாளி விக்னேஷ் தர்மா மதுரையில் உள்ள வழக்கறிஞர் மூலம் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் திடீரென சரணடைந்தார். தான் கோபிநாத்தைக் கொலை செய்து சடலத்தைப் பல்லடம் அருகே மறைத்து வைத்திருப்பதாக அவர் போலீசாரிடம் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்தார்.

விக்னேஷ் கொடுத்த தகவலின் அடிப்படையில், பல்லடம், பொங்கலூர் மற்றும் அவிநாசிபாளையம் போலீசார் மாதப்பூர் கிருஷ்ணாபுரம் பகுதிக்கு விரைந்து சென்று கோபிநாத்தின் அழுகிய உடலைக் கைப்பற்றினர். பின்னர் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கள்ளக்காதல் விவகாரத்தில் ஒருவரைத் திட்டமிட்டு வரவழைத்துக் கொலை செய்துவிட்டு, மதுரையில் சரணடைந்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இது குறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

10 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

11 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

11 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

11 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

11 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

11 மணத்தியாலங்கள் ago