2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த 2021 தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி, இம்முறை தனது எண்ணிக்கையை உயர்த்தி குறைந்தபட்சம் 35 தொகுதிகளைப் பெற ஆர்வம் காட்டி வருகிறது.
மேலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 11 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி பாஜக கூடுதல் இடங்களைக் கோரினாலும், அதிமுக தலைமை அதிக தொகுதிகளை விட்டுக்கொடுக்கத் தயக்கம் காட்டி வருவதாகத் தெரிகிறது.
இந்நிலையில் தொகுதிகளின் எண்ணிக்கையை விட ‘வெற்றி வாய்ப்பு’ உள்ள இடங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளை ஒதுக்கினாலும், அவை பாஜக வெற்றி பெறச் சாதகமான இடங்களாக இருக்கும் என்று அதிமுக உறுதி அளித்துள்ளது.
இதனால் 160 முதல் 170 தொகுதிகள் வரை தாங்கள் போட்டியிட்டால் மட்டுமே தனிப்பெரும் கட்சியாக ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பது எடப்பாடி பழனிசாமியின் வியூகமாக உள்ளது. தொடர் தோல்விகளைத் தவிர்க்கவும், தனது தலைமையின் வலிமையை நிரூபிக்கவும் மிகவும் கவனத்துடன் தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக திட்டமிட்டுள்ளது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…