அப்பா பெரிய பிரபலமாக இருந்தும்.. ‘தமிழ் சினிமாவில் காணாமல் போன வாரிசு நடிகர்கள்’.. அடக்கொடுமையே..!

By Mahalakshmi

Published on:

அப்போ பெரிய பிரபலமாக இருந்த போதிலும் கூட சினிமாவில் ஜொலிக்காமல் போன வாரிசு நடிகர்களை பற்றி தான் இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகிறோம். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் எல்லா சினிமா துறையிலும் வாரிசு நடிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.

   

இவர்களுக்கு சினிமாவில் எளிதாக வாய்ப்பு கிடைத்தாலும் அதற்குப் பிறகு முன்னேறுவது என்பது ரசிகர்களின் கையில் தான் இருக்கின்றது. இவற்றுக்கெல்லாம் விதிவிலக்காக நடிகர் விஜய், சூர்யா, கார்த்திக் நடித்த ஒரு சில நடிகர்கள் மட்டுமே சினிமாவில் முன்னணி நடிகர்களாக மாறி இருக்கிறார்கள். ஆனால் காணாமல் போன பல வாரிசு நடிகர்கள் தமிழ் சினிமாவில் அதிக அளவில் இருக்கிறார்கள்.

இதில் முதலாவதாக நாம் பார்க்கப்போவது பாரதிராஜா மகன் மனோஜ். இயக்குனர் இமயம் என அழைக்கப்படும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் தாஜ்மஹால் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிய இவர் அதன்பிறகு பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் இவரால் முன்னணி நடிகராக வர முடியவில்லை. கடைசியாக சிம்புவின் மாநாடு திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

பாக்யராஜ் மகன் சாந்தனு தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் பாக்கியராஜ். இவரின் மகன் சாந்தனு சக்கரக்கட்டி என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் இவர் நடித்த போதிலும் எந்த படங்களும் அவருக்கு கை கொடுக்கவில்லை.

தமிழ் சினிமாவில் 400 படங்களுக்கு மேல் நடித்த நடிகர் டெல்லி கணேஷ். இவரது மகன் மகாதேவன். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை டெல்லி கணேஷ் அவர்கள் தயாரித்திருந்த நிலையில் இப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு இவரால் சினிமாவில் ஒரு ஹீரோவாக ஜொலிக்க முடியவில்லை.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக வளம் வந்தவர் பி. வாசு, இவரது மகன் சக்தி வாசுதேவன். இவர் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி பின்னர் 2007ஆம் ஆண்டு தொட்டால் பூ மலரும் என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் தற்போது வரை சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த ஒரு படத்திலும் இவர் ஜொலிக்கவில்லை.

பிரித்விராஜன், தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான பாண்டியராஜன் மகன் பிரித்திவிராஜன். இவர் தனது தந்தை இயக்கத்தின் வெளிவந்த கைவந்த கலை என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். ஆனால் தனது தந்தை போன்ற ஒரு இடத்தை இவரால் பிடிக்க முடியவில்லை. தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் இவர் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருக்கிறார்.

author avatar
Mahalakshmi