“ப்ளீஸ் அப்பா என்ன விட்ரு”… பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை… 14 வயது சிறுமிக்கு ஓராண்டாக நடந்த கொடூரம்…!

Spread the love

திருநெல்வேலி மாவட்டம் பணக்குடி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளன. இரண்டாவது மனைவிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் 14 வயதான சிறுமி ஒருவர் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அந்த சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்பட்டதால் சிறுமியின் தாய் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதனால் சிறுமியின் தாயும் மருத்துவர்களும் அதிர்ச்சி அடைந்து சிறுமியிடம் விசாரித்த போது கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் சிறுமிக்கு அவருடைய தந்தை தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்து வந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கர்ப்பமான சிறுமி குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு டி என் ஏ பரிசோதனை செய்ததில் பெற்ற தந்தையே மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கியது உறுதியானது.

இது தொடர்பாக அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதன்படி பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாகிய தந்தைக்கு தூக்கு தண்டனையும் 25,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பத்து லட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…

6 மணத்தியாலங்கள் ago

“இதெல்லாம் சாத்தியமா?” – கொச்சியில் இருந்து ஜெய்சால்மருக்கு ஆட்டோவில் சென்ற வெளிநாட்டவர்கள்.. மிரளவைக்கும் பயணம்..!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…

6 மணத்தியாலங்கள் ago

“இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?” ஒரு காலத்துல சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்.. முதல்வர் மகனைப் பார்த்து கண் கலங்கிய தந்தை எஸ்.ஏ.சி..!!

"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…

6 மணத்தியாலங்கள் ago

“பேட்” கேட்டது குற்றமா..? ஆடை கறையோடு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவி.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்..!!

பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…

7 மணத்தியாலங்கள் ago

“சொன்னபடியே கொன்றுவிட்டேன்” ரேப் கேஸ் போடாத.. கொலை கேஸ் போடு.. காதலிக்கு மரண தண்டனை கொடுத்த கொடூரக் காதலன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…

7 மணத்தியாலங்கள் ago

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க அழகிரியின் மகள்… அதிர்ச்சியில் திமுக..!!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…

7 மணத்தியாலங்கள் ago