திருநெல்வேலி மாவட்டம் பணக்குடி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளன. இரண்டாவது மனைவிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் 14 வயதான சிறுமி ஒருவர் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அந்த சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்பட்டதால் சிறுமியின் தாய் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதனால் சிறுமியின் தாயும் மருத்துவர்களும் அதிர்ச்சி அடைந்து சிறுமியிடம் விசாரித்த போது கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் சிறுமிக்கு அவருடைய தந்தை தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்து வந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கர்ப்பமான சிறுமி குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு டி என் ஏ பரிசோதனை செய்ததில் பெற்ற தந்தையே மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கியது உறுதியானது.
இது தொடர்பாக அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதன்படி பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாகிய தந்தைக்கு தூக்கு தண்டனையும் 25,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பத்து லட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…