கேஸ் சிலிண்டர் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியை சேர்ந்த பாரதி (32) என்பவருடைய மனைவி உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் வீட்டில் பாரதியும் அவருடைய இரண்டு வயது மகன் திருக்குமரனும் தனியாக இருந்துள்ளனர். நேற்று காலை தன்னுடைய மகனுக்கு பால் காய்ச்சுவதற்காக பாரதி கேஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக கேஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு பாரதியின் வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அப்போது பாரதி மற்றும் அவருடைய மகன் மீது தீ பரவி எரிந்த நிலையில் வெளியே ஓடி வந்தனர். அவர்களை மீட்டு அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு தொடர் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. தந்தை பாரதிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. கேஸ் சிலிண்டர் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…