காசாவிற்குள் மனிதநேய உதவிப்பொருட்கள் செல்வதைத் தடுத்து நிறுத்தும் இஸ்ரேலின் எல்லைக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக, ‘சுமூத் புளோட்டிலா’ என்ற அமைப்பைச் சேர்ந்த சர்வதேச மனிதநேய ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர், சர்வதேச உதவிப் பணியாளர்கள் என்றும் பாராமல் அவர்கள் மீது மிகக் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலின் போது, தங்களுக்கு எதிராகப் பேச முயன்ற ஒரு பெண் ஆர்வலரின் கழுத்தைப் பிடித்து நெரித்த பாதுகாப்புப் படையினர், அவரைத் தரையில் கொடூரமாகத் தள்ளி மிதித்துள்ளனர். மேலும், இஸ்ரேலிய அமைச்சர் பென் க்வீர் பகிர்ந்துள்ள ஒரு வீடியோவில், கைது செய்யப்பட்ட சர்வதேச மனிதநேய ஆர்வலர்களின் கைகள் பின்னால் கட்டப்பட்டு, அவர்கள் மண்டியிட வைக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இத்தகைய கொடூரமான வீடியோக்கள் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன. சர்வதேச உதவிப் பணியாளர்கள் மீது இஸ்ரேல் இத்தகைய தாக்குதல்களை நடத்துவது இது முதன்முறையல்ல என்றும், இதற்கு முன்பாக 2003ஆம் ஆண்டிலும் பாலஸ்தீனியர்களின் வீடுகள் இடிக்கப்பட்டபோது இதேபோன்ற அத்துமீறல்கள் நடந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருச்சி திமுகவில் முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேருவின் மகனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வழங்கப்படவில்லை…
கரூர் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தை வீழ்த்துவதற்காக திமுக மூத்த தலைவருமான செந்தில்பாலாஜி தீவிர தேர்தல் உத்திகளை வகுத்து…
தெருவில் தன் குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணை ஒருவன் திடீரென வழிமறித்துத் துன்புறுத்தியபோது, அந்த வழியாகச் சென்றவர்கள் அதைப் பொருட்படுத்தாமல்…
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், பங்கார்பேட்டை தாலுகா விஜயநகர் லே-அவுட் பகுதியில் வசித்து வந்த 70 வயதான வெங்கடகிருஷ்ணபாபு என்பவருக்கு…
நேபாள நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவு உருவாகியுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…
கொளத்தூர் தொகுதி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT தாள்களில் குளறுபடிகள் நடந்ததாகக் கூறி, 100% VVPAT தாள்களையும்…