மரணத்தை வென்ற சிறுமி..ஏழு பேரின் உடலில் உயிராக வாழ்கிறாள்… கோவை உலுக்கிய நெகிழ்ச்சி சம்பவம்..!

Spread the love

கோவையைச் சேர்ந்த 8 வயது சிறுமி வெண்பா, உயிரிழந்த நிலையிலும் தனது உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கி 7 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் சமூகத்தில் பெரும் மரியாதையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 23-ம் தேதி அன்று திடீரென இரத்த அழுத்தம் அதிகரித்து, மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டதால் சுயநினைவிழந்த வெண்பா, கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மருத்துவர்களின் தீவிர சிகிச்சைப் பலனின்றி, பிப்ரவரி 25-ம் தேதி சிறுமிக்கு மூளைச் சாவு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தனது மகள் மீளமாட்டாள் என்ற வேதனையான சூழலிலும், அவளது உறுப்புகள் மூலம் மற்றவர்கள் உயிர் வாழட்டும் என்ற உன்னத நோக்கில் அவளது பெற்றோர் உறுப்பு தானம் செய்ய முன்வந்தனர். தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் வெண்பாவின் கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், எலும்பு மற்றும் தோல் ஆகியவை தானமாகப் பெறப்பட்டன.

தானமாகப் பெறப்பட்ட உறுப்புகள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டன. கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம், கண்கள் மற்றும் இதர உறுப்புகள் கோவையிலுள்ள இதர தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டன. இந்தச் சிறுமியின் உடல் உறுப்புகள் மூலம் 7 பேரின் வாழ்வு ஒளிபெற்றுள்ளது.

இந்த மனிதாபிமான செயலைப் பாராட்டியுள்ள கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல. ஜி. பழனிசாமி, வெண்பாவின் குடும்பத்தினருக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், அரசு விதிமுறைகளின்படி மாவட்ட வருவாய் துறையினர் நேரில் வந்து மலர்வளையம் வைத்து சிறுமியின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். மரணத்திற்குப் பின்னும் பிறருக்கு வாழ்வளித்த சிறுமி வெண்பாவின் தியாகம் கோவையில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

சட்டம் ஒழுங்கு கேள்வி… “உங்க வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?”… செய்தியாளர்களை அதிரவைத்த அமைச்சர்… விஜய்க்கு வந்த அடுத்த சிக்கல்…!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, மக்கள் நலத்திட்டங்கள் அறிவிக்கப்படுவதை விட, தொடர் சர்ச்சைகளே அதிகம்…

2 minutes ago

பரபரப்பு..! தெற்க்கத்திக்காரன் வரும் போது…. அரிவாளை எடுத்து வெட்டணும்… TR பாலு சர்ச்சை பேச்சு..!!

திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு பேசிய கருத்து ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரத்தில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில்,…

2 minutes ago

யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்… விஜய் செய்த ‘அந்த’ ஒரு காரியம்.. ஆடிப்போன டெல்லி அரசியல்… பின்னணியில் இருக்கும் மெகா பிளான்…..!

தமிழக அரசியலில் அண்மைக்காலமாக அரங்கேறி வரும் நகர்வுகள், தேசிய அளவிலான உற்றுநோக்கல்களை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் காலியாக…

12 minutes ago

TVK கட்சியில் இணையவில்லை… அதிகாரபூர்வமாக அறிவித்தார் முக்கிய பிரபலம்… விஜய்க்கு ஷாக்..!!!

தமிழக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் அவர்கள் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணையவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பெஞ்சமின் உள்ளிட்ட…

13 minutes ago

4 நாட்களாக மாயமான தவெக நிர்வாகி…. கல்குவாரியில் சடலமாக மீட்பு… அந்த 1-ஆம் தேதி இரவில் நடந்தது இதுதான்… வெளியான திடுக்கிடும் தகவல்…!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மாயமான தமிழக வெற்றிக் கழக (தவெக) ஒன்றிய நிர்வாகி, நான்கு நாட்களுக்குப் பிறகு தனியார்…

15 minutes ago

“75 நிமிடத்தில் 436 திட்டங்களா?”….1 ஸ்கீமுக்கு 10 நொடி… CM விஜய்யின் முதல் கேபினட் மீட்டிங் ரகசியம்…. ஒரே நாளில் அதிர்ந்த தமிழகம்…!

தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டம் என்பது எப்போதும் அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும்…

19 minutes ago