மறைந்த பிரபல நடிகரும், இயக்குநருமான கே. பாக்யராஜின் உடல், நாளை (ஜூன் 28) மதியம் 1.30 மணி அளவில் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது . தமிழ் திரையுலகிற்கு அவர் ஆற்றிய அளப்பரிய மற்றும் உன்னதமான பங்களிப்பைப் போற்றும் வகையில், அவரது இறுதிச் சடங்கின் போது முழு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . இதற்கான அரசாணையை, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பிறப்பித்து, திரையுலகின் ‘திரைக்கதை மன்னனுக்கு’ தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார் .
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக பாக்யராஜின் உடல் வைக்கப்பட்டுள்ளது . அங்கு அவரது உடலுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் ஏராளமான திரையுலகக் கலைஞர்கள் நேரில் வருகை தந்து தங்களது இறுதி அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர் முதலமைச்சர் விஜய், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதோடு, அவரது குடும்பத்தினருக்கும் தங்களது ஆறுதல்களைக் கூறி வருகின்றனர் .
திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கடையநல்லூர் தொகுதி மதிமுக எம்.எல்.ஏ. இராசேந்திரன், தனது பதவியை ராஜினாமா செய்ய…
தூத்துக்குடி மாவட்டத்தில் குரங்குகள் சூழ்ந்ததால் ஏற்பட்ட பதற்றத்தில், மலை உச்சியிலிருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம்…
தருமபுரி அருகே தகடூர் நகரில் சொத்து தகராறு காரணமாக அக்கா மற்றும் தம்பி ஆகிய இருவர் கழுத்தறுத்து மிகக் கொடூரமான…
மாரடைப்பு என்பது உலக அளவில் மனித உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு நோயாகும். இதய தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டு…
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் அவர்களின் மறைவுக்குத்…
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் அவசரப் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ…