“என் மகனே போய்ட்டான்….” தந்தையை பார்த்து அழுத பிள்ளைகள்…! யோசிக்காமல் தாத்தா செய்த காரியம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

Spread the love

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீனவர் காலனியைச் சேர்ந்த 28 வயதான மீனவர் களஞ்சியம், கடலில் மீன் பிடித்துவிட்டு முன்தினம் வீட்டிற்குத் திரும்பினார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

குளிப்பதற்காக மோட்டார் சுவிட்சை ஆன் செய்தபோது, மோட்டார் இயங்கவில்லை. அதனால் மின் ஒயரைச் சரி செய்ய முயன்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி களஞ்சியம் மயங்கி விழுந்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் அவரை மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மகன் களஞ்சியம் இறந்த அதிர்ச்சியையும் துக்கத்தையும் தாங்கிக்கொள்ள முடியாமல், அவரது தந்தை சேகர் (55) மிகுந்த சோகமடைந்தார். இந்த மனவேதனையில் வீட்டுக்குச் சென்ற சேகர், அங்கு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

வீட்டுக்கு வந்த குடும்பத்தினர் சேகர் தூக்கில் தொங்கியதைக் கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மண்டபம் போலீசார், களஞ்சியம் மற்றும் சேகரின் உடல்களைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட இந்தத் துயரச் சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…

5 மணத்தியாலங்கள் ago

“இதெல்லாம் சாத்தியமா?” – கொச்சியில் இருந்து ஜெய்சால்மருக்கு ஆட்டோவில் சென்ற வெளிநாட்டவர்கள்.. மிரளவைக்கும் பயணம்..!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…

5 மணத்தியாலங்கள் ago

“இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?” ஒரு காலத்துல சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்.. முதல்வர் மகனைப் பார்த்து கண் கலங்கிய தந்தை எஸ்.ஏ.சி..!!

"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…

5 மணத்தியாலங்கள் ago

“பேட்” கேட்டது குற்றமா..? ஆடை கறையோடு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவி.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்..!!

பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…

6 மணத்தியாலங்கள் ago

“சொன்னபடியே கொன்றுவிட்டேன்” ரேப் கேஸ் போடாத.. கொலை கேஸ் போடு.. காதலிக்கு மரண தண்டனை கொடுத்த கொடூரக் காதலன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…

6 மணத்தியாலங்கள் ago

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க அழகிரியின் மகள்… அதிர்ச்சியில் திமுக..!!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…

6 மணத்தியாலங்கள் ago