Categories: சினிமா

இத்தனை நாளா இதை மறைச்சுட்டீங்களே…! பிரம்மாண்டமாக நடைபெற்ற பிரபல வில்லன் நடிகர் ஹரிஷ் உத்தமன் மனைவியின் வளைகாப்பு…! வெளியான புகைப்படங்கள்…!

Spread the love

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான வில்லன் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஹரிஷ் உத்தமன். ஆரம்பத்தில் இவர் பாராமவுன்ட் ஏர்வேஸ் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனங்களில் 3 ஆண்டுகளாக பணியாற்றினார்.

அதற்குப் பிறகு தான் சினிமா மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக மீடியாவிற்குள் நுழைந்தார். பின்னர் சூர்யா பிரபாகரன் இயக்கிய தா என்ற தமிழ் படத்தில் நடித்தார். இது தான் இவருடைய முதல் படம். அதே படத்திற்காக நார்வே தமிழ் பட விழாவில் சிறந்த புதுமுக நடிகர் என்ற விருதை பெற்று இருந்தார்.

இதனை தொடர்ந்து இவர் ராதா மோகன் இயக்கத்தில் கௌரவம் என்ற படத்தில் நடித்தார். அதற்கு பிறகு சூரிய பிரபாகரன் இவரை இயக்குனர் சுசீந்திரனிடம் சிபாரிசு செய்தார்.

பின் சுசீந்திரன் இயக்கத்தில் விஷாலின் நடிப்பில் வெளிவந்த பாண்டிய நாடு என்ற படத்தில் ஹரிஷ் உத்தமன் வில்லனாக நடித்து இருப்பார். இந்த படத்தின் மூலம் தான் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனை தொடர்ந்து இவர் நாடு, தனி ஒருவன், பாயும் புலி, றெக்க, தொடரி, பைரவா, டோரா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் வில்லனாகவும், துணை நடிகராகவும் மிரட்டி இருக்கிறார்.

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அதோடு இவர் தமிழ் படங்களில் பிரபலமாக இருந்தாலும் இவருடைய பூர்வீகம் கேரளா.

நடிகர் ஹரிஷ் உத்தமன் அவர்கள் ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு மேக்கப் ஆர்டிஸ்ட் அம்ரிதா என்பவரை திருமணம் செய்து இருந்தார். அவர் மும்பையைச் சேர்ந்தவர்.

ஆனால், திருமணமான ஒரு வருடத்துக்குள் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரே ஆண்டில் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதைத்தொடர்ந்து அவர் மலையாள நடிகை சின்னு குருவிலா என்பவரை காதலித்துஇரண்டாவது திருமணம் செய்து  கொண்டார்.

நடிகை சின்னு குருவிலா மலையாள நடிகை. இவர் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஃபகத் பாசில் நடிப்பில் தேசிய விருது வென்ற திரைப்படமான ‘நார்த் 24 காதம்’, மம்மூட்டியின் ‘கஸபா’ போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர்.

தற்பொழுது நடிகை சின்னு குருவில்லா கர்ப்பமாக உள்ளார். இவரது வளைகாப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Begam

Recent Posts

காப்பாத்துங்க…! கொழுந்துவிட்டு எரிந்த தீ… நெருப்பு வளையத்தில் சிக்கிய ஐடி அதிகாரிகள்… சினிமா பாணியில் அரங்கேறிய மாஸ் மீட்பு…!!

மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…

3 மணத்தியாலங்கள் ago

“ஆட்டோ டயரில் நாய் சிறுநீர் கழித்ததால் வந்த வினை…” 23 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை…! சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…

3 மணத்தியாலங்கள் ago

“அப்பாவை விட்டுடுடா”கதறிய குடும்பம்… போதையில் வெறிச்செயல் செய்த பெற்ற மகன்… நடுரோட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…

3 மணத்தியாலங்கள் ago

ஈரான் அளித்த அதிரடி ஆஃபர்… அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க… ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை… ட்ரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன?…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…

3 மணத்தியாலங்கள் ago

சினிமா பாட்டு தகராறா?.. இல்லை பழிக்குப் பழியா?.. ரத்த வெள்ளத்தில் கோவில் வளாகம்… இரட்டைக் கொலையில் வெடிக்கும் புது ட்விஸ்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…

3 மணத்தியாலங்கள் ago

தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…

4 மணத்தியாலங்கள் ago