நெகிழ்ச்சி..! 30 குழந்தைகளின் உயிர்… காப்பாற்றிவிட்டு தன்னுயிரை விட்ட தெருநாய்… ஊரே ஒன்றுகூடி செய்த செயல்…!!

Spread the love

இந்தியாவில் தெரு நாய்கள் குறித்த விவாதங்கள் ஒருபுறம் காரசாரமாக நடைபெற்று வரும் வேளையில், ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள தீர்குலா கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் மனிதநேயத்தையும், நன்றியுணர்வையும் நெகிழ்ச்சியுடன் பறைசாற்றியுள்ளது. அங்குள்ள மழலையர் பள்ளியில் சுமார் 30 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒரு கொடிய விஷப்பாம்பு பள்ளி வளாகத்திற்குள் நுழைந்துள்ளது. இதைக் கண்ட ‘காளி’ என்ற பெயர் கொண்ட அந்தத் தெருநாய், குழந்தைகளைக் காக்கத் துணிச்சலுடன் பாம்புடன் மல்லுக்கட்டியது. பாம்பின் கொடிய விஷம் வாய் மற்றும் முகத்தில் ஏறிய போதிலும், குழந்தைகளைத் தீண்டவிடாமல் அந்தப் பாம்பைக் கொல்லும் வரை காளி ஓயவில்லை. இறுதியில் பாம்பைக் கொன்று 30 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய அந்தத் தியாகி, சிறிது நேரத்திலேயே விஷம் தலைக்கேறி தனது உயிரைத் துறந்தது.

இந்தச் செய்தி காட்டுத்தீயாகப் பரவ, அந்தக் கிராமமே சோகத்தில் மூழ்கியது. தங்களின் பிள்ளைகளைக் காப்பாற்றிய அந்த வாயில்லா ஜீவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து காளிக்கு மனிதர்களுக்குச் செய்வது போன்றே முறைப்படியான இறுதிச் சடங்குகளைச் செய்தனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அதன் உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்று, கண்ணீர் மல்க விடைகொடுத்தனர். உயிரைக் கொடுத்து நன்றிக் கடனைத் தீர்த்த காளியின் இந்தத் தியாகம், அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு, தெரு நாய்கள் மீதான அன்பையும் மரியாதையையும் பன்மடங்கு உயர்த்தியுள்ளது.

Soundarya

Recent Posts

என்ன ஒரு டெக்னாலஜி..! புல்லுக்கட்டோடு குழந்தையையும் கட்டிச் செல்லும் தாய்… “அம்மாவை மிஞ்சிய போராளி யாருமே இல்ல” பாராட்டும் இணையவாசிகள்..!!

"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

7 மணத்தியாலங்கள் ago

“என் தந்தை என் பிணத்தைத் தொடவேக் கூடாது” 6 வயசுல நிர்வாணமாக ஓடவிட்டு… கடைசி வரை கடிதத்தை படிங்க.. தற்கொலை செய்த வழக்கறிஞரின் உருக்கமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!!

"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…

7 மணத்தியாலங்கள் ago

காலியான ஏவுகணைகள்…. கதி கலங்கிய டிரம்ப்…! ஈரான் போரில் அமெரிக்கா திடீர் பல்டி அடிக்க இதுதான் காரணமா…?

ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…

7 மணத்தியாலங்கள் ago

டாக்டர் இல்ல.. மருந்து இல்ல!… வெறும் 2 எளிய வழிகள்… முகப்பருக்களை விரட்டியடித்த 23 வயது இளம் பெண்ணின் சீக்ரெட் டிப்ஸ்… துபாய் பெண் பகிர்ந்த வைரல் வீடியோ..!!!

துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…

7 மணத்தியாலங்கள் ago

ராகுல் காந்தி வந்தப்போ நடந்த அந்த ரெய்டு…. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய அதிகாரிகள்…? உண்மையை உடைத்த செல்வபெருந்தகை…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…

8 மணத்தியாலங்கள் ago

“எங்க வீட்டு மகாலட்சுமி வந்தாச்சு” முதன்முறையாக வீட்டுக்கு வந்த AC-க்கு பூஜை போட்டு.. வைரலாகும் நடுத்தரக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்..!!

நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…

8 மணத்தியாலங்கள் ago