விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலமாக அறிமுகமானவர் ரக்சிதா மகாலட்சுமி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியளராக கலந்து கொண்டு விளையாடினார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சரியான பட வாய்ப்புகள் எதுவும் அமையாத நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுக்கும் தவிர பட வாய்ப்புகள் பெற்றுக் கொடுக்காது என்பதை ஓபன் ஆக பேசி பரபரப்பு ஏற்படுத்தி இருந்தார். ஒருபுறம் இவருடைய விவகாரத்தை சர்ச்சை பரபரப்பாக சென்று கொண்டிருக்க வெள்ளித்திரையில் கவர்ச்சி நாயகியாக அவதாரம் எடுத்தார்.
ஜேஎஸ்கே இயக்கத்தின் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ரக்ஷிதா மகாலட்சுமி ஹீரோயின்களில் ஒருவராக நடித்த தமிழரசன், காயத்ரி ஷா, சுரேஷ் சக்கரவர்த்தி, சிங்கம்புலி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சதீஷ்குமார் இயக்கியுள்ளார். இந்த படம் 2020 ஆம் வருடம் நடந்த நாகர்கோவில் காசி என்ற வழக்கை மையப்படுத்தி கதைக்களம். பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அதை படம் பிடித்து அவர்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் ஒரு குணம் உடையவன். இந்த பாத்திரத்தில் தான் பாலாஜி முருகதாஸ் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது .
ஆனால் ரக்ஷிதாவின் ஆபாச காட்சிகள் வெளியான நிலையில் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த இயக்குனர், “பெரிய பெரிய ஹீரோக்கள் விஜய் அஜித் படங்களுக்கு அட்டென்ஷன் இருக்கும். ஆனால் இது போன்ற படங்களுக்கு அட்டென்ஷன் இருக்காது. அதனால் இது போன்ற செய்ய வேண்டி இருந்தது. ரக்ஷிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு கிலிம்பஸ் வீடியோ ஒன்று வெளியிட்டோம். அதில் ஒரு கொஞ்ச பகுதியை கட் செய்து வெளியிட்டோம். படமாக பார்க்கும் போது நன்றாக இருக்கும். கட் பண்ணி வெளியிட்டதால் அப்படி இருக்கிறது.
அந்த வீடியோ வெளியான பிறகு ரச்சிதாவிற்கு பேட் கமெண்ட்ஸ் நிறைய வந்ததால் அவர் அதை பெரிதாக எடுத்துக் கொண்டார். ரச்சிதாவை யாரும் இதுபோன்று எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.. அதை படமாக பார்த்தால் யாருக்கும் அதுபோன்று தெரியாது. ரச்சிதா அதை பெரிதாக நினைத்துவிட்டார். இதுகுறித்து என்னிடம் அவர் கேட்டார். நான் அதற்கு இதை படமாக மட்டும் நீங்கள் பாருங்கள் என்று சொன்னேன் .ஆனால் அவர் அதை பெரிதாக எடுத்துக் கொண்டார்” என்று படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.
தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சம் இல்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. பா.ஜ.கவின் முன்னாள் மாநிலத் தலைவரான…
ஏமனில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவிற்கு எதிராக கடுமையான போர்க்கால எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.…
பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகங்களுக்கு, அரபு நாடுகளின் சில கிராமப்புறப் பகுதிகளில் "ஹயாம்" என்ற விசித்திரமான நோய் பாதிப்பு…
திருப்பத்தூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் முதன்மை அரசு வழக்கறிஞராக, ஆடு திருடிய வழக்கில் கைதாகி சிறை சென்ற வழக்கறிஞர் ஷேக்…
சென்னையில் உள்ள ஒரு ரயிலில் பயணம் செய்த இளைஞர் ஒருவர், சக ஆண் பயணி ஒருவர் தன்னைத் தொடர்ந்து 20…
மெக்ஸிகோவின் ஜலிஸ்கோ மாகாணத்தில் உள்ள லாகோஸ் டி மொரினோ பகுதியில், மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் நபர்களை ஒரு…