நிஜமான பாம்புகள் நிறைந்த அறைக்குள் பெண் ஒருவர் ‘பரமபதம்’ விளையாட்டு விளையாடும் வினோதமான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பொதுவாக நாம் அட்டை அல்லது செல்போனில் விளையாடும் இந்த விளையாட்டை, அந்தப் பெண் தத்ரூபமாக நிஜப் பாம்புகளுக்கு இடையே விளையாடுவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் அந்த அறையில் தரையில் ஏணிகள் வைக்கப்பட்டிருக்க, அப்பெண் ஒரு பகடையை உருட்டுகிறார். பகடையில் விழும் எண்ணிற்கு ஏற்ப அவர் தரையில் நகரும்போது, அங்கு சுற்றித் திரியும் பாம்புகள் அவர் மீது பாய்வதும் அங்கும் இங்கும் துள்ளிக்குதிப்பதுமாக இருப்பது பார்ப்பதற்கே மிகவும் பயங்கரமாக உள்ளது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 40 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
A post shared by Rahila Rashid (@_shilpi_rahila)
“>
இதனை வீடியோவில் அப்பெண் தைரியமாக விளையாடினாலும், பாம்புகள் அவர் மீது பாயும் போது அங்கிருப்பவர்கள் அலறுவதும் சிரிப்பதுமான சத்தங்கள் கேட்கின்றன. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலவிதமான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர் “விளையாடுவது நீங்களாக இருந்தாலும், இதைப் பார்த்து எனக்குத்தான் கால் நடுங்குகிறது” என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.
இந்த விளையாட்டில் பயன்படுத்தப்பட்ட பாம்புகள் விஷமற்றவையாக இருக்கலாம் என்று கருதப்பட்டாலும், இத்தகைய ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது உயிருக்கு அச்சுறுத்தலாக முடியும் என சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…
ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…
நோய்டாவைச் சேர்ந்த ஆதர்ஷ் என்ற இளைஞர், சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய தனது சொகுசு ஃபிளாட்டின் (Flat)…
மதுரை மத்திய தொகுதி NDA (தேசிய ஜனநாயகக் கூட்டணி) வேட்பாளரான இயக்குநர் சுந்தர் சி மீது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சுமார்…
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தேர்தல் நெருங்கும் வேளையில் "மாம்பழத்தில் விஷம்" எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை…
திமுக மாநிலத் துணைச் செயலாளரான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக தொண்டர்கள் தன் மீது செருப்பு வீசியதாகக்…