நள்ளிரவில் புகுந்த காதலன்…. ரத்த வெள்ளத்தில் சரிந்த மம்தா… நிச்சயதார்த்தம் முடிந்த ஆத்திரத்தில் நடந்த பயங்கரம்..!!

Spread the love

பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த 25 வயது இளம்பெண் மம்தா, அதே மருத்துவமனையில் ஆண் செவிலியராக வேலை பார்த்த சுதாகர் (39) என்பவரைக் காதலித்து வந்தார். சுதாகருக்குப் பெற்றோர் வேறொரு பெண்ணுடன் திருமணத்தை நிச்சயித்ததைக் கேள்விப்பட்ட மம்தா, அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

சம்பவத்தன்று மம்தா வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த சுதாகர், நள்ளிரவில் அங்கு சென்றுள்ளார். அப்போது “என்னைத் தான் திருமணம் செய்ய வேண்டும்” என வற்புறுத்திய மம்தாவை, ஆத்திரமடைந்த சுதாகர் சமையலறை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடினார்.

மறுநாள் காலை மம்தா ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வீட்டு உரிமையாளர் போலீசாருக்குத் தகவல் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பெங்களூரு போலீசார், தீவிர விசாரணை நடத்தித் தலைமறைவாக இருந்த காதலன் சுதாகரை அதிரடியாகக் கைது செய்தனர்.

விசாரணையில், நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதால் மம்தாவைத் திருமணம் செய்ய மறுத்ததும், அந்தப் பிரச்சனையில் ஏற்பட்ட ஆத்திரமே இந்தக் கொலைக்குக் காரணம் என்பதும் தெரியவந்தது. மருத்துவத் துறையில் பணியாற்றும் இருவருக்குள் ஏற்பட்ட இந்தக் காதல் விவகாரம் கொலையில் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

பகீர்..! விளையாட்டில் ஏற்பட்ட மோதல்.. 12 வயது சிறுவனின் கண்களை குத்திக் கிழித்த கொடூரம்.. பக்கத்து வீட்டாரின் கொடூரச்செயல்..!!

பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…

24 minutes ago

“சந்து பொந்தெல்லாம் சேஸிங்”… கடைசியில் நேர்ந்த விபரீதம்… லூதியானாவில் நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!

லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…

1 மணத்தியாலம் ago

Breaking: கடைசி நேர அரசியல் டுவிஸ்ட்… திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகச் சிக்கிய கோடிகள்… ஸ்டாலினுக்கு செம ஷாக்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…

1 மணத்தியாலம் ago

“எனக்கு கன்னிப்பெண் தான் வேணும்”… ஐஐடி மாப்பிள்ளையின் விசித்திர நிபந்தனை… மேட்ரிமோனி மேனேஜரின் அதிரடிப் பதிவு…!

கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…

1 மணத்தியாலம் ago

“அம்மா வலிக்குது…” சிறுவனின் கதறலை அலட்சியம் செய்த பெற்றோர்….! தலையணை அடியில் காத்திருந்த எமன்…!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago