நள்ளிரவில் புகுந்த காதலன்…. ரத்த வெள்ளத்தில் சரிந்த மம்தா… நிச்சயதார்த்தம் முடிந்த ஆத்திரத்தில் நடந்த பயங்கரம்..!!

By Devi Ramu on மார்கழி 29, 2025

Spread the love

பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த 25 வயது இளம்பெண் மம்தா, அதே மருத்துவமனையில் ஆண் செவிலியராக வேலை பார்த்த சுதாகர் (39) என்பவரைக் காதலித்து வந்தார். சுதாகருக்குப் பெற்றோர் வேறொரு பெண்ணுடன் திருமணத்தை நிச்சயித்ததைக் கேள்விப்பட்ட மம்தா, அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

சம்பவத்தன்று மம்தா வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த சுதாகர், நள்ளிரவில் அங்கு சென்றுள்ளார். அப்போது “என்னைத் தான் திருமணம் செய்ய வேண்டும்” என வற்புறுத்திய மம்தாவை, ஆத்திரமடைந்த சுதாகர் சமையலறை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடினார்.

   

மறுநாள் காலை மம்தா ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வீட்டு உரிமையாளர் போலீசாருக்குத் தகவல் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பெங்களூரு போலீசார், தீவிர விசாரணை நடத்தித் தலைமறைவாக இருந்த காதலன் சுதாகரை அதிரடியாகக் கைது செய்தனர்.

   

விசாரணையில், நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதால் மம்தாவைத் திருமணம் செய்ய மறுத்ததும், அந்தப் பிரச்சனையில் ஏற்பட்ட ஆத்திரமே இந்தக் கொலைக்குக் காரணம் என்பதும் தெரியவந்தது. மருத்துவத் துறையில் பணியாற்றும் இருவருக்குள் ஏற்பட்ட இந்தக் காதல் விவகாரம் கொலையில் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.