வங்கதேசத்தில் பள்ளி மாணவி பிணைக்கப்பட்டுத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குல்னா மாவட்டம் திகாலியா உபாசிலாவில் உள்ள காசிர்காட் பகுதியில் இயங்கி வரும் சையத் நைமுதீன் மேல்நிலைப் பள்ளியில், நந்திதா ராய் என்ற இந்து மாணவி படித்து வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவு 8:00 மணியளவில், பள்ளியின் பூட்டப்பட்ட கழிப்பறைக்குள் இருந்து அழுகை மற்றும் முனகல் சத்தம் கேட்டுள்ளது. இதைக்கேட்ட உள்ளூர் தொழிலாளர்கள் உடனடியாகக் கதவை உடைத்து, கைகள், கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இருந்த மாணவியை மீட்டனர். முதலுதவிக்குப் பிறகு, அவர் மேல் சிகிச்சைக்காக குல்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மாணவியின் தாய் சிமுல் ராய் ஊடகங்களுக்கு அளித்த தகவலின்படி, சம்பவத்தன்று பள்ளி பிற்பகல் 2:00 மணிக்கு முடிவடைந்துள்ளது. பள்ளி முடிந்ததும் நந்திதா கழிப்பறைக்குச் சென்றபோது, மர்ம நபர் ஒருவர் பின்பக்கத்திலிருந்து அவரது தலையில் பலமாகத் தாக்கியதில் அவர் மயங்கி விழுந்துள்ளார். அதன்பின்னர், தாக்குதல் நடத்தியவர்கள் அவரது கைகள், கால்கள் மற்றும் வாயைக் கட்டி, மயக்க ஊசி செலுத்தியுள்ளனர்.
மேலும், அக்கிரமக்காரர்கள் அந்த மாணவியின் உடலில் பல இடங்களில் பிளேடால் வெட்டி ரத்தக் காயங்களை ஏற்படுத்தியுள்ளதாக அவரது தாய் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இக்கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென உள்ளூர் மக்களும் குடும்பத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெங்களூரு யெல்லப்பா கார்டன் பகுதியைச் சேர்ந்த 40 வயதான முபாரக் பாஷா என்பவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பக்கவாதம் ஏற்பட்டு…
அசாம் மாநிலம் உடல்புரி மாவட்டத்தைச் சேர்ந்த அபிஜித் கிண்டோ என்பவரும், குரியா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதில் குரியா…
தாராபுரம் தொகுதிக்குட்பட்ட குண்டடம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய செயலாளராகச் செயல்பட்டு வந்த பன்னீர்செல்வம், அக்கட்சியிலிருந்து விலகித் தனது…
தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் உள்ள துங் சோங் ஹோங் பகுதியில் வீட்டின் வெளியே சிமெண்டால் கட்டப்பட்ட மீன் தொட்டியில்…
காஞ்சிபுரம் அருகே உள்ள வண்ணான்தாங்கல் பகுதியைச் சேர்ந்த விறகு வியாபாரி ஆறுமுகம் என்பவரிடம், சிங்காடிவாக்கம் இருளர் குடியிருப்பைச் சேர்ந்த ஆனந்தன்…
கேரள மாநிலத்தில் செல்போன் மற்றும் இணையதளங்கள் வாயிலாக இயங்கி வந்த ஆபாச வீடியோ விற்பனை சாம்ராஜ்ஜியத்தை அதிரடியாகக் கண்டுபிடித்து போலிஸார்…