“பெங்களூரு பங்களாவில் பயங்கரம்!… நாய்களைப் பராமரிக்க வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… தொழிலதிபர் செய்த வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பின்னணி”…!!!

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை தாலுகாவைச் சேர்ந்த தொழிலதிபர் தீபக் கிருஷ்ணா, தனது பங்களாவில் வேலை செய்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஸ்மிதா (47) என்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, பின்னர் தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாய்களைப் பராமரிக்கும் வேலைக்காகச் சேர்ந்த ஸ்மிதாவை, ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் தீபக் கிருஷ்ணா தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் சம்மதிக்காததால் ஆத்திரமடைந்த தொழிலதிபர், உருட்டுக்கட்டையால் ஸ்மிதாவைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

இந்தக் கொடூரத் தாக்குதலைத் தடுக்க முயன்ற சக ஊழியர்களான அலினா மற்றும் சின்னு ஆகியோரையும், தீபக் கிருஷ்ணா கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார். நடந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டல் விடுத்ததால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த ஸ்மிதாவை மீட்ட சக ஊழியர்கள், அவரை முதலில் சூலிபெலே மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காகக் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள ஜூபிலி மிஷன் மருத்துவமனையிலும் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி ஸ்மிதா பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது கணவர் ஆண்டனி அளித்த புகாரின் பேரில் கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணைக்காகச் சூலிபெலே போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. தலைமறைவாக இருந்த தொழிலதிபர் தீபக் கிருஷ்ணாவைத் தனிப்படை அமைத்துத் தேடிய போலீசார், இறுதியில் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட தீபக் கிருஷ்ணா ஏற்கனவே குற்றப்பின்னணி கொண்டவர் என்பது தெரியவந்தது. சில தினங்களுக்கு முன்புதான் ஒரு மதுபான விடுதியில் தகராறில் ஈடுபட்டு, துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்ட வழக்கில் அவர் சிறைக்குச் சென்று வந்துள்ளார். தற்போது பெண் தொழிலாளியைக் கொலை செய்த வழக்கில் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

பங்காளிகளின் வெறிச்செயல்..! நிலத்துக்காகப் பிறந்த உடன்பிறப்புகளைத் தீர்த்துக்கட்டிய உறவினர்கள்.. தருமபுரியை உலுக்கிய இரட்டைக் கொலை..!!

தருமபுரி அருகே தகடூர் நகரில் சொத்து தகராறு காரணமாக அக்கா மற்றும் தம்பி ஆகிய இருவர் கழுத்தறுத்து மிகக் கொடூரமான…

7 minutes ago

25 வயதிலேயே மாரடைப்பா?… ‘ஈஸ்ட்ரோஜன்’ தீர்ந்ததும் பெண்களுக்கு வரும் ஆபத்து… திடீரென மாரடைப்பு ஏற்பட்டால் பதறாமல் முதலில் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்…!

மாரடைப்பு என்பது உலக அளவில் மனித உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு நோயாகும். இதய தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டு…

14 minutes ago

“இது பொய்யாக இருக்கக்கூடாதா..?” இயக்குநர் பாக்யராஜ் மறைவு குறித்து சீமான் உருக்கம்..!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் அவர்களின் மறைவுக்குத்…

20 minutes ago

மதிமுக வெளியேறியதற்கு இதுதான் காரணமா..? திருமண விழாவில் ஸ்டாலின் – வைகோ இடையே நடந்தது என்ன..? பரபரப்பு பின்னணி..!!

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் அவசரப் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ…

23 minutes ago

பரபரப்பு..! “எங்களை ஏன் கேவலமா பேசினீங்க..? ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை… வேதனையில் நொறுங்கிப்போன வைகோ… பரபரப்பு குற்றசாட்டு..!!

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியதற்கான அதிர்ச்சி பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.…

29 minutes ago

“ராஜினாமா செய்யுங்கள் நான் பாத்துக்குறேன்” வாக்குறுதி கொடுத்த விஜய்…? செம மகிழ்ச்சியில் வைகோ…!!

மதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகுமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் முதலமைச்சருமான விஜய் கேட்டுக்கொண்டதாக மதிமுக பொதுச்செயலாளர்…

37 minutes ago