CINEMA
“இதனால் தான் விசித்திரா அந்த நடிகரோட பேர சொல்லல”… நேரலையில் பெரிய குண்டை தூக்கி போட்ட நடிகை ஷகீலா…
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது , தற்பொழுது 50 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதில், தங்கள் வாழ்வில் நடந்த பூகம்ப விஷயங்களை பகிர்ந்துக்கொள்ளும் டாஸ்க் ஒன்று வழங்கப்பட்டது. இதில் பேசிய நடிகை விசித்ரா கூறியதாவது, ‘நான் கடந்த 2001ம் ஆண்டில், ஒரு டாப் ஹீரோ படத்தில் நடிக்க கேரளா சென்றிருந்தேன். அப்போது மலம்புழாவில் ஷூட்டிங் நடந்தது. அப்போது, அந்த படத்தின் ஹீரோவிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்கள். அவர், இந்த படத்தில் நீ நடிக்கிறாயா என கேட்டார். ஆமாம் என்றேன். உடனே, இன்னிக்கு நைட் என் ரூமுக்கு வந்துவிடு என்றார்.
என் பெயரை கூட கேட்கவில்லை. இது அதிர்ச்சியாக இருந்தது. நான் அவரை கண்டுகொள்ளவில்லை. அன்று இரவு ஓட்டல் அறையில் நான் தங்கியிருந்த போது, நான்கைந்து பேர் என் கதவை தட்டி பயமுறுத்தினர். தினமும் ஏதோ ஒரு விதத்தில் என்னை டார்ச்சர் செய்தனர். அங்கிருந்த ஒரு ஓட்டல் ஊழியர் என் பிரச்னையை புரிந்துக்கொண்டு தினமும் ஒரு அறையில் தங்க வைத்தார். இதன்பிறகு ஷூட்டிங் நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட சண்டை காட்சியில் என் உடம்பில் தேவையில்லாத தொட்டு தொட்டு அவர்கள் நடிப்பது போல் என்னை சீண்டல் செய்தனர்.
ஒரு கட்டத்தில் அவர்கள் கையை பிடித்துவிட்டேன். இதுகுறித்து அங்கிருந்த ஸ்டண்ட் மாஸ்டரிடம் புகார் சொன்னேன். அவர் அத்தனை பேர் முன்னிலையில் என் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அதன்பின் ஒரு கட்டத்தில், இந்த சினிமாத்துறையே வேண்டாம் என ஒதுங்கி விட்டேன். நான் சினிமாவை விட்டு முற்றிலும் விலகியதற்கு இந்த சம்பவம்தான் காரணம் என விசித்ரா கூறியிருந்தார். தற்பொழுது நடிகை விசித்ராவை தொடர்ந்து பல்வேறு நடிகைகளும் சூட்டிங் ஸ்பாட்டில் தங்களுக்கு நடந்த பாலியல் தொந்தரவுகள் குறித்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பிக் பாஸ் நேரலையில் கலந்து கொண்ட நடிகை சகிலா ‘ ஈவிபி சத்திய நாராயண ராவ் என்ற இயக்குனர் என்னை கூப்பிட்டாரு. தப்பா தான் கூப்பிட்டாரு. அடுத்த படத்துல நான் வாய்ப்பு தரேன். அட்ஜஸ்ட்மென்ட்க்காக. நான் சொன்னேன் சார். இந்த படத்துக்கு சம்பளம் வாங்கிட்டேன். அடுத்த படத்துல நடிக்க எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல. நான் அந்த மாதிரி பண்ணது கிடையாது. எனக்கு அந்த அவசியம் வரவில்லை. அவர் இறந்துட்டாரு.
ஆனா இப்ப அவர் பேர சொல்றேன். நான் இன்னும் தெலுங்குல நடிச்சுகிட்டு தான் இருக்கேன். என்ன தெலுங்கு industry ல கூப்பிட்டு கேள்வி கேட்கலாம். எனக்கு பயம் இல்லையே. எங்க நீங்க சொல்லுங்க பாக்கலாம்? யார் நடிகர்- னு?, அவங்களுக்கு தைரியமில்லை’ என்று விசித்ராவை பார்த்து கேள்வி எழுப்பி உள்ளார். இந்த பேட்டி முழுவதும் அவர் விசித்ராவை தாக்கியே பேசியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஷகீலா அம்மாக்கு விசித்ரா மீது இவ்ளோ பொறாமையா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…