ஒடிசா மாநிலம் மயூராஜி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்றில் பணியாற்றி வருபவர் சுகந்தி கர். இவர் பள்ளியில் காலை இறைவணக்கத்திற்கு பிறகு 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களை தன்னுடைய காலைத் தொட்டு வணங்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்துள்ளார். கடந்த சில வாரங்களாக மாணவர்கள் சுகந்தியின் காலை தொட்டு வணங்கி வந்துள்ளார்கள் .இந்த நிலையில் கடந்த வாரம் வியாழக்கிழமை இறைவணக்கத்திற்கு பிறகு தன்னுடைய காலை தொட்டு வணங்க ஆசிரியர் சுகந்தி வற்புறுத்தி உள்ளார்.
ஆனால் மாணவர்கள் தொட்டு வணங்க மறுப்பு தெரிவித்துள்ளார்கள். இதனால் கோபம் அடைந்த சுகந்தி பிரம்பால் மாணவர்களை சரமாரியாக தாக்கியதில் மாணவ மாணவியர் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் குறித்து அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் காலை தொட்டு வணங்காததால் மாணவ மாணவியரை ஆசிரியர் தாக்கியது உறுதியானது. இதனை அடுத்து சுகந்தியை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…