ஒடிசா மாநிலம் மயூராஜி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்றில் பணியாற்றி வருபவர் சுகந்தி கர். இவர் பள்ளியில் காலை இறைவணக்கத்திற்கு பிறகு 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களை தன்னுடைய காலைத் தொட்டு வணங்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்துள்ளார். கடந்த சில வாரங்களாக மாணவர்கள் சுகந்தியின் காலை தொட்டு வணங்கி வந்துள்ளார்கள் .இந்த நிலையில் கடந்த வாரம் வியாழக்கிழமை இறைவணக்கத்திற்கு பிறகு தன்னுடைய காலை தொட்டு வணங்க ஆசிரியர் சுகந்தி வற்புறுத்தி உள்ளார்.
ஆனால் மாணவர்கள் தொட்டு வணங்க மறுப்பு தெரிவித்துள்ளார்கள். இதனால் கோபம் அடைந்த சுகந்தி பிரம்பால் மாணவர்களை சரமாரியாக தாக்கியதில் மாணவ மாணவியர் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் குறித்து அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் காலை தொட்டு வணங்காததால் மாணவ மாணவியரை ஆசிரியர் தாக்கியது உறுதியானது. இதனை அடுத்து சுகந்தியை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
தமிழக அரசியலில் நீண்டகாலம் செல்வாக்கு செலுத்தி வந்த பாட்டாளி மக்கள் கட்சி, தற்போது குடும்பப் பூசலால் பிளவுபட்டுள்ள நிலையில், டாக்டர்…
வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் இன்னும் முழுமையாகக் கலைந்துவிடாத நிலையில், ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு…
ஆளி விதை நீர்: தயாரிக்கும் முறையும் ஆரோக்கியத் தொடக்கமும் ஆளி விதைகள் மட்டுமின்றி, அதன் நீரும் உடல் நலத்திற்கு ஒரு…
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு…
திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டமன்றத் தொகுதியில், திமுகவின் இளம் வேட்பாளர் டாக்டர் கோகிலாமணியை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட திடீர்…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு, மூத்த அரசியல்வாதி பழ. கருப்பையா ஒரு…