பெண்கள் சுயதொழில் தொடங்க குறைந்த வட்டியில் ரூ.1.25 லட்சம் வரை கடன் வழங்கும் அரசு… எப்படி பயன்பெறுவது..?

Spread the love

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்பதற்காக அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் பலரும் சொந்தமாக தொழில் தொடங்கி தொழில் முனைவோர்களாக விரும்புகிறார்கள். அவர்களுக்கு நிதி உதவி வழங்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் சூப்பரான கடன் திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி புதிய குழு கடன் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பாக அறிமுகப்படுத்தப்பட்டது. குழு படங்கள் சுய உதவிக் குழு சார்பாக வழங்கப்படுகின்றது. அதிகபட்சமாக 1.25 லட்சம் ரூபாய் வரை சுய உதவி குழுவில் உறுப்பினராக இருக்கும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும்.

இந்த கடனுக்கான மொத்த ஆண்டு வட்டி விகிதம் 6% ஆகும். இரண்டரை ஆண்டுகள் காலக்கெடுவுக்குள் இந்த கடன்களை திருப்ப செலுத்த வேண்டும். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் வழங்கப்படும் இந்த கடனை பெறுவதற்கு சுய உதவி குழுவில் உறுப்பினராக இருப்பது அவசியமாகும். அதிகபட்சமாக 20 உறுப்பினர்கள் கொண்ட சுய உதவிக் குழு தொடங்கி ஆறு மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் 18 முதல் 60 வயது வரை உடையவராகவும் அவருடைய ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருப்பது அவசியம்.

இந்த திட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் குடும்பத்தில் ஒருவர் மட்டுமே கடன் பெற முடியும். ஆன்லைன் மூலம் டாப்செட் கோவின் www.tabcedco.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு, பிறப்பிடச் சான்றிதழ் மற்றும் ஓட்டுனர் உரிமம் போன்ற ஆவணங்களை சமர்ப்பித்து இதற்கு விண்ணப்பிக்கலாம். சீர் மரபினர் நல அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று ஆஃப்லைன் மூலமும் விண்ணப்பித்துக் கொள்ளும் வசதி உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் ரூபாய் வழங்கும் புதிய திட்டம் ஒன்றையும் தமிழக அரசு அறிமுகம் செய்து வைத்தது. பெண்களுக்கு சுய தொழில் தொடங்குவதற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்தொகை சார்பாக 50,,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டு வரும் நிலையில் ஆதரவற்ற மற்றும் நலிவுற்ற பெண்கள், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்கள் நிதி உதவி பெறலாம். விண்ணப்பதாரர் தங்கள் மாவட்ட சமூக அலுவலர் அணுகி ஐம்பதாயிரம் ரூபாய் சுய தொழில் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்

Nanthini

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

6 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

6 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

6 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

6 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

7 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

7 மணத்தியாலங்கள் ago