Categories: சினிமா

கிருத்திகா உதயநிதி முதல் பிரபுதேவா வரை பல பிரபலங்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகை.. இதுல அப்டி என்ன இருக்கு தெரியுமா..?

Spread the love

சுவர் இருந்தால்தான் சித்திரம் என்ற பழமொழி யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ ஆனால், சினிமா நடிகர், நடிகைகளுக்கு நிச்சயம் பொருந்தும். ஏனென்றால் அவர்கள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே, அவர்கள் சினிமா துறையில் சாதிக்க முடியும். அதனால் பல நடிகர்கள் உடல் ஆரோக்கியத்தில் தீவிர கவனம் செலுத்துவர். உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றுவர். வெளியூர்களில் படப்பிடிப்பு என்றாலும் கூட உடற்பயிற்சிகளை தினமும் செய்வர். அப்படி உடல் ஆரோக்கியத்தில் அதிக தீவிரம் காட்டுபவர்களாக எம்ஜிஆர், சிவக்குமார், கமல்ஹாசன், விக்ரம், விஜய், சூர்யா போன்றவர்களை குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.

அந்த வகையில், இப்போது பல நடிகர், நடிகையர் இயற்கை உணவு சிறுதானியங்கள் மீது அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா முதல் நடிகர் பிரபுதேவா வரை மாப்பிள்ளை சம்பா அரிசி, கருப்பு கவுனி, குதிரைவாலி போன்ற சிறுதானிய உணவுகளை விரும்பி சாப்பிடுவதாக கூறுகின்றனர். அதில் உள்ள லைக்கோபீன் என்ற சத்து, புற்றுநோயை குணப்படுத்தும், புற்றுநோயை எதிர்க்கும் தன்மை கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

முன்பெல்லாம் நடிகர்கள், நடிகைகள் மத்தியில் உணவு சார்ந்த விழிப்புணர்வு இருக்காது. குறிப்பாக சில நடிகர்கள், அசைவ வகை உணவுகளையே விரும்பி சாப்பிடுவர். மதுப்பழக்கம் கொண்டவர்களாகவும் இருப்பர். ஆனால், இப்போது பல நடிகர்கள் அதுபோன்ற நிலையில் இல்லாமல் தங்களது உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறையுடன், குறிப்பாக உணவு விஷயத்தில் அதிக கட்டுப்பாடுடன் இருக்கின்றனர். அதனால்தான் ரஜினி, கமல், விஜய் போன்றவர்கள் வயது ஏற, ஏற இளமையான தோற்றத்தில் காட்சியளிக்கின்றனர். சிறுதானியங்களை கொண்டு செய்யப்படும் இட்லி, தோசை, புட்டு, கஞ்சி போன்ற அயிட்டங்களை சாப்பிட்டு உடல் நலத்தை கவனித்துக்கொள்கின்றனர்.

admin

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

6 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

6 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

6 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

6 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

6 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

6 மணத்தியாலங்கள் ago