ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அட்லி. ஆனால் தெறி, மெர்சல், பிகில் போன்ற விஜய் படங்கள்தான் அட்லிக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. பிகில் படத்தை பார்த்த பிறகுதான் ஷாருக்கான், இந்தி படத்தை இயக்கும் வாய்ப்பை தந்ததாக கூறப்படுகிறது. இப்போது ஜவான் படம் 1150 கோடி ரூபாய் வசூலில் சாதனை புரிந்ததால், தொடர்ந்து இந்தி படங்களை இயக்க அட்லிக்கு வாய்ப்புகள் வருகிறது. இப்போது ஷாருக்கான் படத்தையே அடுத்து இயக்கும் வாய்ப்பு அட்லிக்கு உருவாகி உள்ளது.
சமீபத்தில் அட்லி அளித்த ஒரு பேட்டியில் விஜய், ஷாருக்கான் இணைந்து நடித்தால் அந்த படம் ரூ. 3 ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கும். அப்படிப்பட்ட ஒரு படத்தை இயக்க விரும்புகிறேன் என தெரிவித்து இருந்தார். மேலும் விஜய் படத்தை தான் அடுத்து இயக்குவார். அல்லது ஷாருக்கான் உடன் மீண்டும் படம் பண்ண வாய்ப்பு அமைந்தால், நிச்சயம் விஜய்தான் அதில் இணைந்து நடிப்பார் எனவும் பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
ஆனால், இப்போது ஷாருக்கான் உடன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை அட்லி இயக்குவது உறுதியாகி விட்டது. விஜயை அட்லி இயக்க மறுத்தாரா, அல்லது அந்த கதைக்கான கேரக்டரில் கமல்தான் நடிக்க வேண்டும் என ஷாருக்கான் விரும்பினாரா என தெரியவில்லை. ஏனெனில் ஷாருக்கான் ஏற்கனவே ஹேராம் படத்தில் நடித்த வகையில், கமலின் நீண்ட கால நண்பர்தான்.
ஒருவேளை விஜய் 68, விஜய் 69 படங்கள் ஏற்கனவே கமிட் ஆகி இருப்பதாலும், 2026 சட்டசபை தேர்தலை அவர் எதிர்கொள்ள தயாராகி வருவதாலும் இதில் விஜய்க்கு பதில், கமல்ஹாசனை அட்லி தேர்வு செய்தாரா என்பதும் தெரியவில்லை. ஆனால், ஜவான் 1150 கோடி ரூபாய் வசூலித்தது என்பதால் கமலே, அட்லி படத்தில் விரும்பி நடிக்கலாம் என்ற தகவலும் உள்ளது. ஆனால், விஜய் நடிக்காமல் ஷாருக்கான் படத்தில் நடிப்பது விஜய் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தையும், அட்லி மீது கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…