‘காலா’ திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து மிரட்டியவர் நடிகர் நானா பட்டேக்கர். இவர் நடிகர் மட்டுமின்றி இயக்குனர், பாடகர், என பல்வேறு திறமைகளை கொண்டவர். இவர் ஏற்கனவே தமிழில் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘பொம்மலாட்டம்’ திரைப்படத்தில் கோபக்கார இயக்குனராக நடித்திருப்பார். இப்படி பொம்மலாட்டம் படத்தில் சைலட்டாக நுழைந்து, வெயிட்டான வில்லன் என்று ‘காலா’ படத்தின் மூலம் நிரூபித்துள்ளார் நானா பட்டேக்கர்.
இவரின் முழுப்பெயர் விஷ்வநாத் பட்டேக்கர். மகாராஷ்டிராவில் பிறந்த இவர் மும்பையில் இருக்கும் சர்.ஜே.ஜே. இன்ஸ்டிடியூட் ஆப் ஆப்லைட் ஆட்ஸ் கல்லூரியில் படித்தார். இவருடைய முதல் திரைப்படம் ‘கமான்’. பாலிவுட் திரைப்படமான இது 1978 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதை தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் இவருக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியது ‘பரிந்தா’ என்கிற திரைப்படம் தான்.
இவர் பாலிவுட் திரைப்படங்கள் மட்டும் இன்றி பல மொழிப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக மராத்தி மொழியில் இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் ‘கிரந்த்வீர்’ என்கிற திரைப்படத்தில் நடித்ததற்காக 1995 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். மேலும் 1990 ஆம் ஆண்டு நடித்த ‘பரிந்தா’ மற்றும் 1997 ஆம் ஆண்டு வெளியான ‘அக்னி சாக்ஷி’ ஆகிய படங்கள் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.
இதோடு மட்டுமின்றி விவசாயிகளுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். தற்பொழுதும் இவர் பல்வேறு மொழித்திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் அவருடன் செல்பீ எடுத்துக் கொள்ள முயன்ற போது அவரை தலையிலேயே ஓங்கி அடித்து தள்ளி விட்டார். அவர் செய்த இந்த செயலுக்கு நெட்டிசன்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இந்த வீடியோ வைரலான நிலையில், தற்போது இவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார் அந்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘படத்தின் ஒரு காட்சிக்காக ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தோம் அப்போது ஒரு நபர் உள்ளே வந்தார் அவர் யாரென்று எனக்கு தெரியாது. நடிகர் என நினைத்து சீனில் இருந்தபடி அடித்து விட்டு அவரை புறப்பட சொன்னேன்.
ஆனால் பின்னரே அவர் எங்கள் குழுவை சேர்ந்தவர் இல்லை என தெரிந்தது. உடனே அவரை அழைக்க நினைத்தேன் .ஆனால் அவர் அதற்குள் சென்று விட்டார். அவரின் நண்பர் யாரோ தான் வீடியோ எடுத்திருக்கக்கூடும். மற்றபடி என்னோடு புகைப்படம் எடுக்க வந்த யாரையும் நான் எதுவும் சொல்லவில்லை. நான் இச்செயலை செய்யவில்லை. இச்சம்பவம் தவறுதலாக நடந்து விட்டது. ஏதேனும் தவறாக புரிந்து இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். இனி நான் இப்படி செய்ய மாட்டேன்’ என்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளா.ர் ஒரு சிலர் இதனை ஏற்றுக் கொண்டாலும், மற்றொரு புறமோ ‘அடிக்கிறத அடிச்சிட்டு அது படத்தோட சீனா?’ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…
ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டத்திற்கு நடுவே குரங்கு ஒன்று செய்த குறும்புத்தனமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் சிரிப்பலைகளை உருவாக்கி…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது ராணுவ பலத்தைப் பெருக்கி வருகிறது. ஏற்கனவே…
ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு இடையே, இந்தியா மற்றும் இலங்கைக்கு சரக்குகளை ஏற்றி வந்த இரண்டு…
ஸ்காட்லாந்தில் வசிக்கும் தமிழக இளம்பெண் ஒருவர், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தமிழகம்…
நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்கி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கியதில் இருந்து, அவருக்குப் பல்வேறு சவால்கள்…