மகாராஷ்டிர மாநிலம் நாந்தேடு மாவட்டத்தில், வாள் பாபா என்று அழைக்கப்படும் ஞானேஸ்வர் கர்டே என்ற போலிச்சாமியார் பிலோலி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக படுர் கிராமத்தில் ஆசிரமம் நடத்தி வந்த இவர், கையில் எப்போதும் ஒரு நீண்ட வாளையும் எலுமிச்சையையும் வைத்துக்கொண்டு மக்களை அச்சுறுத்தி வந்துள்ளார்.
மேலும் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களைக் குணப்படுத்துவதாகவும், குடும்பப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதாகவும் கூறி, அப்பாவி மக்களிடமிருந்து பெருமளவு பணத்தையும் நகைளையும் அபகரித்து வந்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையின் போது, அந்தப் போலிச்சாமியார் கையில் வாளுடன் பெண்களையும் குழந்தைகளையும் மிரட்டித் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் புகார்களின் அடிப்படையில் அதிரடிச் சோதனை நடத்திய காவல்துறையினர், அவரைத் தடுப்பதற்கு முயன்ற அவரது ஆதரவாளர்கள் இருவரையும் சேர்த்துக் கைது செய்தனர். மகாராஷ்டிராவின் ‘சூனிய எதிர்ப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மக்கள் இதுபோன்ற மூடநம்பிக்கைகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி, ரக்ஷா பந்தன் பண்டிகை தினத்தன்று ஓர் அரிய பகுதியளவு சந்திர கிரகணம் நிகழவுள்ளது.…
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள கல்யாணி நகர் பகுதியில், சாலையில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்த நபரிடம் நூதன முறையில் பணம்…
கேரள பாஜக மாநில துணைத் தலைவராகச் செயல்பட்டு வந்த பிரபல மலையாள நடிகர் தேவன், அக்கட்சியின் செயல்பாடுகள் திருப்தியளிக்கவில்லை என்றும்,…
திமுக தொடக்கம் முதலே பெரியாரின் கடவுள் மறுப்பு மற்றும் பகுத்தறிவு கொள்கைகளைத் தனது அடிப்படை சித்தாந்தமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.…
மான்செஸ்டர் சிட்டி அணியின் முன்னணி கால்பந்து வீரரான எர்லிங் ஹாலண்ட், தனது புகழ்பெற்ற நீண்ட முடியை வெட்டி புதிய தோற்றத்திற்கு…
கினியா நாட்டின் தலைநகரான கோனாக்ரியில் அமைந்துள்ள மிகப்பெரிய குப்பைக் கிடங்கில், திடீரெனப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மலைபோலக் குவிக்கப்பட்டிருந்த…