Categories: சினிமா

ஒரு ரூபாய் சம்பளத்துக்கு நடிக்கத் தயாராக இருந்த டி ஆர் மகாலிங்கம்… ஏவிஎம் கொடுத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Spread the love

தமிழ் சினிமாவில் தியாகராஜ பாகவதர், பி யு சின்னப்பா ஆகிய இருவரும் முதல் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தனர். அவர்களுக்குப் பிறகு எம் ஜி ஆர், சிவாஜி என்ற அடுத்த சூப்பர் ஸ்டார்கள்  உருவாகினர். ஆனால் இவர்கள் இரண்டு தலைமுறைக்கு நடுவே சைலண்ட் சூப்பர் ஸ்டாராக மிக சொற்ப காலமே ஜொலித்தவர் டி ஆர் மகாலிங்கம்.

இவர் தென்கரை என்ற கிராமத்தில் கட்டுப்பெட்டித் தனமான ஒரு பார்ப்பன அக்ரஹாரத்தில் பிறந்தார். குடும்ப வழக்கப்படி இவரும் பாடல்கள் கற்றுக்கொண்டு மிகச்சிறப்பாக பாடியுள்ளார். அதனால் இவர் புகழ் பரவ தொடங்கியுள்ளது. இதனால் அவரை படத்தில் நடிக்க வைக்க ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் முடிவு செய்துள்ளார்.

அப்படிதான் அவர் நந்தகுமார் மற்றும் பிரகலாதா போன்ற படங்களில் நடிக்க தொடங்கினார். அப்படி படிப்படியாக பல படங்களில் நடித்த அவர் பாகவதருக்குப் பின்னர் தமிழ்நாடே கொண்டாடும் சூப்பர் ஸ்டாராக ஆனார். இதற்கிடையில் ஏவிஎம் நிறுவனம் ஸ்ரீவள்ளி என்ற பெயரில் ஒரு படத்தை எடுக்கும் முடிவில் இருந்துள்ளது.

அந்த படம் முருகனைப் பற்றிய படமாக உருவாக இருந்ததை அறிந்த டி ஆர் மகாலிங்கம் தானாக விரும்பிச் சென்று ஏவிஎம் செட்டியாரிடம் இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பை எனக்குக் கொடுங்கள் எனக் கேட்டுள்ளார். அவர்கள் உறுதியாக எந்த பதிலும் சொல்லாத நிலையில் ‘எனக்கு சம்பளமாக ஒரு ரூபாய் கொடுத்தாலும் பரவாயில்லை’ என்று சொல்லியுள்ளார்.

அதைக் கேட்ட ஏவிஎம் நிறுவனம் அவருக்கு 3000 ரூபாய் சம்பளம் தந்து அமர்த்திக் கொண்டதாம். ஆனால் ஸ்ரீவள்ளி படம் முடியும் வரை வேறு படத்தில் ஒப்பந்தம் ஆகக் கூடாது என நிபந்தனை விதித்ததாம். அதை டி ஆர் மகாலிங்கமும் ஏற்றுக்கொள்ள படம் 2 லட்சம் ரூபாய் முதலீட்டில் உருவாகி 20 லட்சம் ரூபாய் லாபம் சம்பாதித்ததாம். டி ஆர் மகாலிங்கத்தின் புகழும் உச்சத்துக்கு சென்றுள்ளது.

vinoth

Recent Posts

“நான் சாகல.. உயிரோடுதான் இருக்கேன்…” பிணமாக நடித்து முதியவர் நடத்திய நூதனப் போராட்டம்… உறைய வைக்கும் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…

9 minutes ago

“செல்போனை பிடுங்கி சித்திரவதை…” 2 பிள்ளைகளை தவிக்க விட்டு தாய் எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!

பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும்…

19 minutes ago

“நைட்டி போடாதன்னு சொன்னேன்ல…?” மனைவியை எரித்துக் கொல்ல முயன்ற தொழிலாளி…! குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…

28 minutes ago

“நீயும் அழகா இருக்க..” வாலிபரை வீட்டுக்குத் தூக்கிச் சென்று தர்ம அடி கொடுத்த குடும்பத்தினர்… வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…

35 minutes ago

“எல்லாரோட லட்சணமும் எனக்குத் தெரியும்” விஜய் -திரிஷா விவகாரத்தில் கொந்தளித்த நடிகை வனிதா..!!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…

39 minutes ago

இந்த வருடத்துக்கு பின் பிறந்தவர்கள் இனி வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்க முடியாது… இங்கிலாந்தின் அதிரடிச் சட்டம்..!!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…

44 minutes ago